நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழிக்காக வாதாடியவர் ராம்ஜேத்மலானி.. ஒரு பிளாஷ்பேக்!
Recommended Video
டெல்லி: நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழிக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிட்டார்.
மூத்த வழக்கறிஞரான ராம்ஜேத்மலானி தனது 95 ஆவது வயதில் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவர் முக்கியமான வழக்குகளில் முத்திரை பதித்தவர் என அனைவராலும் அழைக்கப்படுபவர்.
2ஜி ஸ்பெர்ட்ரம் ஊழல் வழக்கிலும் இவர் வாதாடியுள்ளார். இந்த வழக்கில் கலைஞர் டிவிக்கு ரூ 214 கோடி கடன் வழங்கப்பட்ட விவகாரத்தில் கனிமொழியின் பெயரை குற்றப்பத்திரிகையில் சிபிஐ சேர்த்தது.

ராம்ஜேத்மலானி
இந்த நிலையில் கனிமொழி கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினார். அப்போது அவருக்கு முன்ஜாமீன் வழங்குமாறு அவரது வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதம் செய்தார்.

வாதம்
மேலும் எல்லாத் தவறுக்கும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ஆ ராசாதான் காரணம். கனிமொழிக்கு இதில் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்கு தாய், அவர் எங்கும் ஓடிவிட மாட்டார். எனவே அவருக்கு முன்ஜாமீன் தருமாறு வாதம் செய்தார்.

விடுவிப்பு
எனினும் அவருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டு 15 நாட்கள் கைது செய்யப்பட்டு கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் கனிமொழி, ஆ ராசா உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதற்கு ராம்ஜேத்மலானியின் வாதத் திறமையும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சொத்துக் குவிப்பு வழக்கு
கனிமொழிக்காக ராம்ஜேத்மலானி வாதம் செய்வதற்கு முன்னதாக முக ஸ்டாலின், கீ. வீரமணி, மத்திய திமுக அமைச்சர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர். அது போல் ஜெயலலிதாவுக்காக கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் ராம்ஜேத்மலானி வாதம் செய்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் வாதாடியது குறிப்பிடத்தக்கது.
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications