RAW ‘ரா’ புதிய தலைவராக ரவி சின்ஹா நியமனம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் முதன்மையாக உளவு மற்றும் கொள்கை வகுப்பு அமைப்பான Research and Analysis Wing ரா-வின் புதிய தலைவராக ரவி சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதன்மை உளவு அமைப்புகள் ஐபி மற்றும் ரா. ரா அமைப்பானது உளவு மற்றும் கொள்கை வகுப்பு விவகாரங்களில் முதனமையானது. இதன் தற்போது ரா அமைப்பின் தலைவராக சமந்த் கோயல் பதவியில் உள்ளார். இவரது பதவிக் காலம் ஜூன் 30-ந் தேதி நிறைவடைகிறது.

இதனைத் தொடர்ந்து ரா அமைப்பின் புதிய தலைவராக ரவி சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1988-ம் ஆண்டு சத்தீஸ்கர் பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரி ரவி சின்ஹா. தற்போது டெல்லியில் மத்திய அமைச்சரவை செயலக செயலாளர் பதவியில் உள்ளார். ரா அமைப்பின் தலைவராக ரவி சின்ஹா, அடுத்த 2 ஆண்டுகள் பதவி வகிப்பார்.












Click it and Unblock the Notifications