அந்த 6 மாநிலங்கள்.. டெல்டா பிளஸ்...கொரோனா 2-ம் அலை ஓயவில்லை என மத்திய அரசு சொல்வதன் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால்தான் கொரோனா 2-வது அலை இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்கிறது மத்திய அரசு.

Recommended Video

    India-வில் Coronavirus 3rd Wave அடுத்த மாதம் ஏற்படலாம்.. SBI வல்லுநர் குழு எச்சரிக்கை

    2 மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அப்போது நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.12 லட்சமாக இருந்தது. இப்போது ஒருநாள் பாதிப்பு என்பது 40,000 என்கிற அளவில் உள்ளது.

    அதேபோல் 2 மாதங்களுக்கு முன்னர் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 37.41 லட்சமாக இருந்தது. இது தற்போது 4.77 லட்சமாக குறைந்திருக்கிறது. பெரும்பாலான மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு வெகுவாகவும் குறைந்திருக்கிறது.

    இன்னமும் பாதுகாப்பு இல்லை

    இன்னமும் பாதுகாப்பு இல்லை

    ஆனால் நிதி ஆயோக் குழு உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், ஒட்டுமொத்த தேசமும் பாதுகாப்பாக இருக்கும் வரை நாம் பாதுகாப்பாக இல்லை என புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். கொரோனா பாதிப்பு குறைந்திருக்கும் நிலையில் டாக்டர் வி.கே.பால் ஏன் இப்படி சொல்கிறார்?

    அந்த 6 மாநிலங்கள்..

    அந்த 6 மாநிலங்கள்..

    கேரளா, ஒடிஷா, சத்தீஸ்கர், அருணாச்சல் பிரதேசம், திரிபுரா, மணிப்பூர் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. மேலும் மொத்தம் 71 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த நிலையில்தான் இருக்கிறது.

    டெல்டா பிளஸ்

    டெல்டா பிளஸ்

    இந்தியாவின் தற்போதைய சராசரி ஒருநாள் பாதிப்பு என்பது 13% ஆக குறைந்திருக்கிறது. ஜூன் 30-ந் தேதி புதிய டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 56 பேராக இருந்தது. மேலோட்டமாக இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் 12 மாநிலங்களில் இந்த டெல்டா பிளஸ் புதிய வகை வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்கின்றன புள்ளி விவரங்கள்.

    நடவடிக்கையில் மத்திய அரசு

    நடவடிக்கையில் மத்திய அரசு


    இந்த காரணங்களால்தான் கொரோனா 2-வது அலை முடிவுக்கு வரவில்லை என்கிற மத்திய அரசு. தற்போது கொரோனா அதிக பாதிப்பு உள்ள 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு குழுக்களை அனுப்பி இருக்கிறது. மேலும் கொரோனா பாதிப்பு குறையாத மாவட்டங்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கைகளை மாநிலங்கள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி

    அத்துடன் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை முழு வீச்சில் முன்னெடுப்பதும் முக்கியமான ஒன்றாக கருதுகிறது மத்திய அரசு. தற்போது கர்ப்பிணி பெண்களுக்கும் கூட கொரோனா தடுப்பூசி போடலாம் என மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+