பிரதமருக்கு ஒரு நீதி.. எங்களுக்கு ஒரு நீதியா.? வாரணாசி தேர்தலை ஒத்தி வைங்க.. விவசாயிகள் புகார் மனு
டெல்லி: பிரதமா் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் விவசாயிகள் மனு அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் நிர்வாகிகளில் ஒருவரான தெய்வசிகாமணி, வாரணாசியில் தேர்தல் அதிகாரிகள் விதிமுறைகளை மீறி ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக புகார் கூறியுள்ளார்

வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற விவசாயிகள் மீது வாரணாசி காவல்துறையினர் அடக்குமுறையை கையாண்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார். வாரணாசியில் போட்டியிட தமிழக விவசாயிகள் 40 பேரும் தெலுங்கானாவிலிருந்து 60-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் ஒன்றாக சென்றதாக கூறினார்
டெபாசிட் தொகையை கட்ட தேவையான செல்லானை கொடுக்காமல், வேண்டுமென்றே 3 மணி நேரம் இழுத்தடித்தனர். ஆகவே எங்களால் சரியாக மனு தாக்கல் செய்ய முடியவில்லை
சரியாக மனு தாக்கல் செய்திருந்த 35 பேரின் மனுவும் நிராரிக்கப்பட்டுள்ளது. காரணமின்றி வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து தான் வாரணாசியில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என கோருகிறோம்.
பிரதமர் என்பதால் அவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி நாட்டில் இருக்க கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளதாக விவசாயிகள் கூறினர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications