ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கூடுதல் இலவச வசதிகள்..மத்திய அரசு திருத்தம்
டெல்லி: நாட்டில் ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழங்கப்படும் இலவசங்கள் தொடர்பான அறிவிக்கையில் மத்திய அரசு திருத்தங்கள் செய்துள்ளது. இதனடிப்படையில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பங்களா கிடைக்கும்.
நாட்டில் பொதுமக்களுக்கு இலவசங்களை வழங்குவதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இலவசங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பல கருத்துகளை தெரிவித்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமையுடன் என்.வி.ரமணா பணி ஓய்வு பெற்றார். அப்போது இலவசங்கள் தொடர்பான வழக்கை மூன்று நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டார். நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித் பொறுப்பேற்றுள்ளார்.

இதனிடையே மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னதாக ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதில் ஓய்வு பெறும் தலைமை நீதிபதிக்கு 6 மாதம் இலவச பங்களா உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சகம் இந்த அறிக்கையில் திருத்தங்களை செய்துள்ளது. இதன்படி ஓய்வு பெறும் தலைமை நீதிபதிக்கு இலவச பங்களா 6 மாதம் வழங்கப்படும்; ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு 24 மணிநேர பாதுகாவலர்கள் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுவர்.
தலைமை நீதிபதி/ ஓய்வு பெறும் நீதிபதி செல்போன், தொலைபேசி கட்டணங்கள்- இணையவசதிகளை மாதம் ரூ4,200க்குள் இலவசமாக பயன்படுத்தலாம். இந்த கட்டணமும் வீட்டு பணியாளர், ஓட்டுநர், உதவியாளருக்கான ஊதிய செலவுகளும் உச்சநீதிமன்றம்/ உயர்நீதிமன்றங்களின் செலவுகளாகுமாம். ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிக்கு இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ70,000. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ39,000.












Click it and Unblock the Notifications