Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒலியை விட 3 மடங்கு வேகம்! துல்லிய தாக்குதல்.. 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணையில் மாஸ் காட்டும் இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய ராணுவத்தின் 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக இன்று சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய கடற்படைக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய ராணுவம் என்ற வரிசையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. ஆசியாவை பொறுத்த அளவில் இந்திய ராணுவம் இரண்டாவது பெரிய ராணுவமாக இருக்கிறது. எனவே ஒவ்வொரு நாளும் புதியதாக ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றன. அந்த வரிசையில் இன்று 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. இது நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் ஏவுகணை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Rising Sun BrahMos missile test-fires to accurately hit long-range targets

பிரமோஸ் வகை ஏவுகணைகள் இந்திய ராணுவத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து இந்த ஏவுகணையை வடிவமைத்தன. ஆனால், தற்போது இந்தியா தனித்தன்மையுடன் இதனை உற்பத்தி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மணிக்கு 3000 கி.மீ வேகத்தில் சீறி பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகளுக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரில் இதனை பயன்படுத்தியிருக்கிறது. இந்த ஏவுகனைகளை உக்ரைனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவே, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை கேட்டு இந்தியாவுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

Rising Sun BrahMos missile test-fires to accurately hit long-range targets

மறுபுறம் இன்று 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணையை இந்தியா அந்தமான் நிகோபர் தீவு பகுதியில் வெற்றிகரமாக இன்று சோதனை செய்திருக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் இது பயணிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இருப்பினும் துல்லியமாக எத்தனை கி.மீ வேகத்தில் இது பயணிக்கும்? எவ்வளவு தூர இலக்கை தாக்கும் என்கிற விவரங்கள் வெளியிடப்படவில்லை. தற்போதைய சூழலில் செங்கடல் பகுதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கிறது. அந்த வழியாக போகும் சரக்கு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சிறை பிடிக்கப்படுகின்றன. இந்தியாவுக்கு வரும் கப்பல்களும், இந்தியாவிலிருந்து செல்லும் கப்பல்களும் இதில் அடங்கும். எனவே, செங்கடல் பகுதியில் இந்தியா தனது பிடியை இறுக்க இந்த ஏவுகணை உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+