ஒலியை விட 3 மடங்கு வேகம்! துல்லிய தாக்குதல்.. 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணையில் மாஸ் காட்டும் இந்தியா
டெல்லி: இந்திய ராணுவத்தின் 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக இன்று சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய கடற்படைக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
உலகின் மிகப்பெரிய ராணுவம் என்ற வரிசையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. ஆசியாவை பொறுத்த அளவில் இந்திய ராணுவம் இரண்டாவது பெரிய ராணுவமாக இருக்கிறது. எனவே ஒவ்வொரு நாளும் புதியதாக ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றன. அந்த வரிசையில் இன்று 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. இது நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் ஏவுகணை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பிரமோஸ் வகை ஏவுகணைகள் இந்திய ராணுவத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து இந்த ஏவுகணையை வடிவமைத்தன. ஆனால், தற்போது இந்தியா தனித்தன்மையுடன் இதனை உற்பத்தி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மணிக்கு 3000 கி.மீ வேகத்தில் சீறி பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகளுக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரில் இதனை பயன்படுத்தியிருக்கிறது. இந்த ஏவுகனைகளை உக்ரைனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவே, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை கேட்டு இந்தியாவுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

மறுபுறம் இன்று 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணையை இந்தியா அந்தமான் நிகோபர் தீவு பகுதியில் வெற்றிகரமாக இன்று சோதனை செய்திருக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் இது பயணிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இருப்பினும் துல்லியமாக எத்தனை கி.மீ வேகத்தில் இது பயணிக்கும்? எவ்வளவு தூர இலக்கை தாக்கும் என்கிற விவரங்கள் வெளியிடப்படவில்லை. தற்போதைய சூழலில் செங்கடல் பகுதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கிறது. அந்த வழியாக போகும் சரக்கு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சிறை பிடிக்கப்படுகின்றன. இந்தியாவுக்கு வரும் கப்பல்களும், இந்தியாவிலிருந்து செல்லும் கப்பல்களும் இதில் அடங்கும். எனவே, செங்கடல் பகுதியில் இந்தியா தனது பிடியை இறுக்க இந்த ஏவுகணை உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இந்தியாவுக்கு வெடி வைத்த டிரம்ப்! அமெரிக்காவால் நமக்கு தொட்டதெல்லாம் நஷ்டம் தான்! -
“ஒரு டான்ஸ் ஆடியது குத்தமா.. அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்.. என்ன இப்படி ஆகிடுச்சு -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
IND Vs NZ: மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை.. வாய் பேசிய சான்ட்னரை வாயடைக்க வைத்த இந்தியப் படை! -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
இந்த ரெக்கார்டு போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா! பல ஆண்டு ரொக்கார்டுகளை சல்லி சல்லியாக உடைத்த SKY படை! -
ரஷ்ய எண்ணெய்யை வாங்க.. அனுமதி கொடுத்த அமெரிக்கா! பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்! -
இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு இருக்காது.. சரியான நேரத்தில் உள்ளே வந்த ரஷ்யா! அமெரிக்காவுக்கு செக்












Click it and Unblock the Notifications