வீழ்வேன் என நினைத்தாயோ? 3 ஆண்டுகளுக்குப் பின் ஆக்டிவ் அரசியலில் லாலு-பீகாரில் இனிதான் ஆட்டம்!
டெல்லி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற நிலையில் ஜாமீனில் வெளிவந்திருக்கும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) நிறுவனரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின் தீவிர அரசியலுக்குத் திரும்பியுள்ளார்.
பீகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாத மீது மாட்டுத் தீவனம் கொள்முதல் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் ஒன்றில் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் லாலு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஜாமீனில் லாலு
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவுக்கு அண்மையில் ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து டெல்லியில் மூத்த மகள் வீட்டில் தங்கி உள்ளார் லாலு பிரசாத் யாதவ். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு உடலில் ஆக்சிஜன் அளவு இயல்பைவிட குறைவாக இருக்கிறது.

தலைவர்களுடன் ஆலோசனை
இந்த நிலையிலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமையன்று ஆலோசனை நடத்தி இருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். அப்போது, கொரோனாவால் மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற முடியாமல் இருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என உருக்கமாக லாலு வேண்டுகோள் விடுத்தார்.

பீகார் அரசியல்
லாலு பிரசாத் யாதவால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. இருந்தபோதும் அவர் உருக்கமாக மக்களைப் பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது ஆர்ஜேடி தலைவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆர்ஜேடி தலைவர்கள், லாலு பிரசாத் மெல்ல மெல்ல அரசியல் பணிகளுக்கு முழுமையாக திரும்புவார். பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வீழ்த்த வியூகம் வகுத்து களமிறங்குவார் லாலு என்கின்றனர் அக்கட்சியின் சீனியர்க.

ஆர்ஜேடி பெருமிதம்
மேலும் பீகாரில் இதுவரை எந்த ஒரு தலைவருமே பொதுமக்களை பற்றி கவலைப்பட்டது இல்லை. தமக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் சூழலிலும் கூட மக்களுக்காக கவலைப்படுகிற ஒரே தலைவர் லாலுதான் என்றும் பெருமிதப்படுகின்றனர் ஆர்ஜேடி தலைவர்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications