ஔரங்கபாத் விபத்து: பசி- தாகத்தாலேயே செத்து விடுவோம்.. மனைவியிடம் கடைசியாக பேசிய கணவன்
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்கபாத் அருகே ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கி கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறி 16 பேர் பலியான சம்பவத்தில் பசியால் செத்துவிடுவோம் என தங்களது குடும்பத்தினரிடம் கடைசியாக பேசியுள்ளனர்.
Recommended Video
மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவில் உள்ள ஸ்டீல் தொழிற்சாலையில் மத்திய பிரதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக பணியில்லாததாலும் ஊதியம் இல்லாததாலும் இவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் ஜால்னாவிலிருந்து புவாசல் பகுதிக்கு ரயில் ஏறுவதற்காக இவர்கள் சென்றனர். அப்போது போலீஸ் கெடுபிடிக்கு பயந்து கொண்டு ரயில் தண்டவாளம் வழியாக சென்றனர்.

தண்டவாளம்
புவாசல் சென்றால் அங்கிருந்து மத்திய பிரதேசத்திற்கு ரயிலில் செல்லலாம் என புறப்பட்டுள்ளனர். பல கி.மீ தூரம் நடந்து சென்ற இவர்கள் களைத்து போனர். இதனால் சரக்கு ரயிலை மறந்த இவர்கள் பயணிகள் ரயில்கள் வராது என நினைத்து ரயில் தண்டவாளங்களில் தலை வைத்து படுத்து தூங்கினர். இந்த நிலையில் சரக்கு ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்ததால் இவர்கள் மீது ஏறியது.

பணம் இல்லை
இதில் 16 பேர் உடல் சிதறி இறந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பாஸ் கோரிய நிலையில் அதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பலியான 16 பேரில் ஒருவரது குடும்பத்தினர் கூறுகையில் எங்களிடம் பணம் இல்லை.

ஒப்பந்ததாரர்
பணம் ஏதாவது இருந்தால் அனுப்புங்கள். ஒப்பந்ததாரரும் பணம் தரவில்லை. உணவில்லாமல் பசி வாட்டி வதைக்கிறது. குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பசி தாகத்தாலேயே செத்து விடுவோம் போல் இருக்கிறது என தனது மனைவியிடம் கடந்த வியாழக்கிழமை அவர் தெரிவித்துள்ளார். கடந்த இரு மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்காமல் ஒப்பந்ததாரர் இழுத்தடித்து வந்துள்ளார்.

தொழிலாளர்
ஒரு கட்டத்தில் அனைவரும் கேட்ட போது இதோ தருகிறேன் அதோ தருகிறேன் என பொய் கூறியிருந்தார். கடந்த 7-ஆம் தேதி ஊதியம் தருவதாக கூறியிருந்த இவர் மாயமாகிவிட்டார். இவர் மட்டும் சம்பளம் கொடுத்திருந்தால் தொழிலாளர்கள் ஊர்களுக்கு செல்ல முயன்றிருக்க மாட்டார்கள். தண்டவாளங்களில் படுத்துறங்குவது எத்தனை ஆபத்தானது என்பதை யோசிக்கக் கூட தங்களுக்கு தெம்பில்லை என விபத்தில் சிக்காத ஒரு தொழிலாளர் தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications