அந்த ரூ.15 லட்சம் வரும்.. ஆனா ஒரு சிக்கல்.. அட இந்த பாஜக அமைச்சர் பேசுறதை கேளுங்க!
மத்திய பாஜக அரசு எல்லா மக்களின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போட போகிறது என்று மத்திய பாஜக அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: மத்திய பாஜக அரசு எல்லா மக்களின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போட போகிறது என்று மத்திய பாஜக அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்து இருக்கிறார்.
நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜக மோசமாக தோல்வியை தழுவி இருக்கிறது. இதனால் பாஜக மீண்டும் மக்களின் மதிப்பை பெற கடுமையாக முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில் சமூக நீதி மற்றும் முன்னேற்றம் துறைக்கான மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கிறார்.
மோடி வாக்கு
2014 தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, ''நாங்கள் வெற்றி பெற்றால் எல்லோர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம்'' என்று கூறினார். வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணங்களை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வருவோம். பின் அதை மக்களின் வங்கி கணக்கில் போடுவோம் என்று கூறினார்.
ஆனால் ஜும்லா
ஆனால் பாஜகவின் 4.5 வருட ஆட்சியில் 500, 1000 ரூபாய் கையை விட்டு போனதே தவிர ஒரு ரூபாய் கூட வங்கி கணக்கில் வரவில்லை. கடைசியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, அதெல்லாம் தேர்தல் ஜும்லா என்று கூறும் அளவிற்கு சென்றார். இதனால் பாஜக மீது பெரிய அளவில் விமர்சனம் வைக்கப்பட்டது.
என்ன சொன்னார்
இந்த நிலையில்தான் நேற்று பேட்டியளித்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ''நாங்கள் 15 லட்சம் ரூபாய் பணம் போட தயாராக இருக்கிறோம். ஆனால் மக்களின் வங்கி கணக்கிற்கு அது ஒரேயடியாக வராது. கொஞ்சம் கொஞ்சமாக வரும். இப்போது உடனடியாக போட முடியாது'' என்று கூறி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இப்படியா
அதோடு, நாங்கள் ரிசர்வ் வங்கியிடம் இதற்காக பேசி இருக்கிறோம். அவர்கள் பணம் கொடுக்க மறுக்கிறார்கள். இதில் சில தொழில்நுட்ப பிரச்சனை இருக்கிறது, என்றும் விளக்கம் அளித்துள்ளார். இவரது இந்த பேச்சு பெரிய வைரலாகி உள்ளது. நேற்றில் இருந்து நெட்டிசன்ஸ் இவரை வைத்து இணையத்தில் கிண்டல் செய்து வருகிறார்கள்.