ரூ. 2000 நோட்டு அச்சிடுவது குறைப்பு... தடையா... மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!!
டெல்லி: நாட்டில் ரூ. 2000 நோட்டு அச்சிடுவது குறைக்கப்பட்டுள்ளது ஆனால், தடை செய்யப்படவில்லை. அதுகுறித்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்று லோக் சபாவில் எழுத்துபூர்வ பதிலில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ரூ. 2000 நோட்டு அச்சிடுவது நிறுத்தப்பட்டு இருப்பதாக அவ்வப்போது செய்தி வெளியாகி வருகிறது. இதுகுறித்து லோக் சபாவில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் அனுராக் தாகூர் எழுத்துபூர்வ பதில் அளித்து இருந்தார்.

தடையா
அதில், ''நாட்டில் 2000 ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தப்படவில்லை. குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் சில ரூபாய் நோட்டுக்கள் இந்திய ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அச்சிடப்படும்.

உத்தரவு
கடந்த 2019-20 மற்றும் 2020-21 கால கட்டத்தில், 2000 ரூபாய் நோட்டு அச்சிடுவது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால், இந்த ரூபாய் நோட்டு அச்சிடுவது தடை செய்வது குறித்து எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. 2020, மார்ச் 31ஆம் தேதி வரை நாட்டில் 2,000 ரூபாய் நோட்டு, மொத்தம் ரூ. 273.98 கோடி புழக்கத்தில் இருந்தது.

ரூபாய் நோட்டு
கொரோனா கால கட்டத்தில் தற்காலிகமாக ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தப்பட்டு இருந்தது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் நெறிகளின்படி சிறிது சிறிதாக ரூபாய் நோட்டு அச்சிடும் பணி துவங்கும்.

மீண்டும் துவக்கம்
கொரோனா தாக்கத்தின் காரணமாக 2020, ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல், மே 3ஆம் தேதி வரை பாரதிய ரிசர்வ் வங்கி முத்ரன் பிரைவேட் லிமிடெட் நோட்டு அச்சிடுவதை ரத்து செய்து இருந்தது. மே 4ஆம் தேதி முதல் மீண்டும் அச்சிடுவது துவங்கியுள்ளது. இந்திய பிரிண்டிங் அண்ட் மின்டிங் கார்பரேஷனிலும் நோட்டு அச்சிடுவது நிறுத்தப்பட்டு இருந்தது'' என்று தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications