மோடியின் மெகா திட்டம்.. "இவங்களுக்கு" எல்லாம் ரூ. 2500.. மத்திய அரசு மாஸ் பிளான்! இதை படிங்க
மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக பெண்களுக்கும் பல்வேறு தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டெல்லி: மத்திய அரசு சார்பாக பெண் தொழில்முனைவோருக்கு உதவித்தொகை அளிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கும், பெண்களுக்கும் பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக இவர்கள் தொழில் தொடங்க பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

பயிற்சி
இந்த மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் பல்வேறு தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசு சார்பாக பயிற்சி நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் திறன் கொண்ட பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதிக அளவில் இளைஞர்கள் இருந்தாலும் திறன் கொண்ட பணியாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. இதை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

என்ன பயிற்சி
வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையவராக இளைஞர்களை பயிற்சி அளிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் பெண்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண்கள் சம்பாதிக்கும் விதமாக, முக்கியமாக திருமணம் ஆன பெண்களும் வருமானம் ஈட்டும் விதமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண்கள் சுய தொழில், சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ளும் விதமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இதில்தான் உதவித்தொகையும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

தொழிற்பயிற்சி
அதன்படி குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் வரை இருந்தால் பெண்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படும். இவர்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இவர்கள் மத்திய அரசின் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அந்த பயிற்சியின் மூலமாக தொழில் தொடங்கும் பட்சத்தில் இந்த உதவித்தொகை அளிக்கப்படும். பெண்கள் சுயமாக வேலைகளை செய்வதற்காக இந்த உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. முன்னதாக திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. கடந்த பட்ஜெட்டிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

எப்போது வரும்
இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். நான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து மாற மாட்டேன். கண்டிப்பாக எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன். மக்களுக்கு கண்டிப்பாக மாத 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். இதில் மாற்றம் இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில்தான் சில மாற்றங்களுடன் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் எல்லாம் வந்த பின் இந்த உரிமை தொகையை வரும் மார்ச் 8ம் தேதி.. அதாவது சர்வதேச மகளிர் தினத்தில் இருந்து வழங்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளதாக முதலில் செய்திகள் வந்தன. ஆனால் அதற்கு போதிய அவகாசம் இல்லாத காரணத்தால் திட்டம் கொஞ்சம் தாமதம் ஆகலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் இன்னும் 5-6 மாதங்களில் நிறைவேற்றப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications