“இந்துக்கள் இல்லையெனில்.. உலகம் அழிந்துவிடும்!” ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து!
டெல்லி: "இந்துக்கள் இல்லையெனில் உலகம் அழிந்துவிடும். வெவ்வேறு நாடுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் நாம் கண்டோம், ஆனால் நாம் இன்னும் இங்கு இருக்கிறோம், அப்படியே இருப்போம். பாரதம் ஒரு அழியாத நாகரீகம்" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பது விவாதங்களை தூண்டியுள்ளது.
மூன்று நாட்கள் பயணமாக மோகன் பகவத் மணிப்பூர் சென்றிருக்கிறார். அங்கு ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களிடையே அவர் பேசியதாவது, "இந்துக்கள் இல்லையென்றால், உலகம் இருக்காது. பல்வேறு நாடுகள் அழிந்த போதிலும், இந்தியா ஒரு சேதமுமின்றி வளர்ந்து வருகிறது. சூழல்கள் வரும், போகும். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் வெவ்வேறு சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சில நாடுகள் அழிந்தன. கிரீஸ், எகிப்து மற்றும் ரோமா ஆகிய அனைத்து நாகரீகங்களும் பூமியில் மறைந்துவிட்டன.

முழு இந்தியாவும் நமக்குச் சொந்தமானது என்பது அனைவருக்கும் இடையிலான அடிப்படை புரிதல். ஆனால் தற்போது தலைவர்கள் அரசியல் கட்டாயங்கள் காரணமாக மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். பாரதவர்ஷம் (பாரதம்) காலம் காலமாக இருந்து வருகிறது. மகாபாரதம், ராமாயணம் மற்றும் காளிதாசரின் சிறந்த இலக்கியங்களிலும் பாரதவர்ஷம் பற்றிய முழுமையான குறிப்புகள் உள்ளன. மணிப்பூரிலிருந்து ஆப்கானிஸ்தான் வரையிலான நிலப்பரப்பே பாரதவர்ஷம் என வரையறுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா, பல பேரரசுகளின் மாற்றத்தை கண்டிருக்கிறது. பல அரசர்கள் இருந்த காலங்களும், பின்னர் ஒரு சிறந்த ஆட்சியாளர் இருந்த காலங்களும் உண்டு. நாம் சுதந்திரமாக இருந்த காலங்களும் உண்டு, தாக்குதலுக்கு உள்ளான காலங்களும் உண்டு. ஆனால் இந்தியா வலிமையாக நிலைத்து நின்று, ஐக்கியப்பட்ட ஒரு வரலாற்று நாடாக இருந்தது. இருப்பினும், 1945ல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அரசியல் நிலப்பரப்பு மாறியது. அதன்பிறகு இந்த விஷயத்தில் வெவ்வேறு கருத்துக்கள் எழுந்தது.
ஆர்எஸ்எஸ் எந்த அரசியலிலும் ஈடுபடுவதில்லை, எந்த அமைப்பையும் ரிமோட் கன்ட்ரோல் செய்வதில்லை. இந்தியா ஒன்றுப்பட வேண்டிய நேரமிது" என்று பேசியுள்ளர். மணிப்பூரின் இம்பாலில் பழங்குடி தலைவர்களைச் சந்தித்த பாகவத், சமூக ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications