தியாகத்துக்கான உதாரணம் ஆர்எஸ்எஸ்.. ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பெருமை
டெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா இன்று டெல்லியில் நடந்தது. பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆர்எஸ்எஸ் நினைவு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதன்பிறகு பிரதமர் மோடி பேசுகையில், ‛‛ தியாகம் மற்றும் நாட்டை கட்டெழுப்புதல் உள்ளிட்டவற்றுக்கான உதாரணமாக ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது'' என்று பெருமையாக கூறினார்.
பாஜகவின் தாய் அமைப்பாக ஆர்எஸ்எஸ் உள்ளது. இந்த அமைப்பு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 1925ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாா் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடங்கினார். மக்களுக்கான கலாசார பாதுகாப்பு, ஒழுக்கம், சமூக சேவையை அடிப்படையாக கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

கடந்த 1925ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று இந்த அமைப்பு உதயமானது. ஆர்எஸ்எஸ்சின் அரசியல் கட்சியாக பாஜக செயல்பட்டு வரும் நிலையில் இன்னும் பல அமைப்புகள் ஆர்எஸ்எஸ்ஸின் கிளையாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் ஆர்எஸ்எஸ்-ஸின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாப்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள அம்பேத்கர் சா்வதேச மையத்தில் ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆா்எஸ்எஸ் அமைப்பு நாட்டுக்கு அளித்த பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நினைவு அஞ்சல் தலை மற்றும் 100 ரூபாய் நினைவு நாணயத்தை பிரதமா் மோடி வெளியிட்டார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: தேசத்துக்கு தான் முன்னுரிமை என்ற கொள்கையில் ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் 100 ஆண்டு பயணம் என்பது தியாகம், தன்னலமற்ற சேவை, நாட்டை கட்டமைத்தல் மற்றும் ஒழுக்கத்துக்கான எடுத்தக்காட்டாக உள்ளது. ஆர்எஸ்எஸ் பல துணை அமைப்புகளை கொண்டுள்ளார். ஆனால் அந்த அமைப்புகள் ஒருபோதும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக செயல்பட்டது இல்லை. அதேபோல் பிளவுப்பட்டதும் இல்லை.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஆர்எஸ்எஸ்ஸில் உள்ள அனைத்து அமைப்புகளின் முதன்மை நோக்கம் ஒன்று தான். ‛‛தேசம் தான் முதல்' என்பது தான் அனைத்து அமைப்புகளின் நோக்கமாக இருக்கிறது. இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. ‛நான்' என்ற எண்ணத்தை ‛நாம்' என சொல்ல கற்றுக்கொடுக்கும் அமைப்பாக ஆர்எஸ்எஸ் உள்ளது.
ஆர்எஸ்எஸ் இந்த 100 ஆண்டுகளில் எண்ணற்ற தியாகங்களை செய்துள்ளது. ஒரே பாரதம் - உன்னத பாரதம் என்ற ஒரே குறிக்கோளை இப்போது முன்னெடுத்து வருகிறது. பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும் ஆர்எஸ்எஸ் தனது கொள்கையை விட்டு கொடுக்காமல் இன்றும் வலுவாக இருக்கிறது. நாட்டிற்கும், சமூகத்திற்கும் அயராது சேவை செய்து வருகிறது'' என்றார்.
-
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications