தியாகத்துக்கான உதாரணம் ஆர்எஸ்எஸ்.. ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பெருமை
டெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா இன்று டெல்லியில் நடந்தது. பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆர்எஸ்எஸ் நினைவு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதன்பிறகு பிரதமர் மோடி பேசுகையில், ‛‛ தியாகம் மற்றும் நாட்டை கட்டெழுப்புதல் உள்ளிட்டவற்றுக்கான உதாரணமாக ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது'' என்று பெருமையாக கூறினார்.
பாஜகவின் தாய் அமைப்பாக ஆர்எஸ்எஸ் உள்ளது. இந்த அமைப்பு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 1925ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாா் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடங்கினார். மக்களுக்கான கலாசார பாதுகாப்பு, ஒழுக்கம், சமூக சேவையை அடிப்படையாக கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

கடந்த 1925ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று இந்த அமைப்பு உதயமானது. ஆர்எஸ்எஸ்சின் அரசியல் கட்சியாக பாஜக செயல்பட்டு வரும் நிலையில் இன்னும் பல அமைப்புகள் ஆர்எஸ்எஸ்ஸின் கிளையாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் ஆர்எஸ்எஸ்-ஸின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாப்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள அம்பேத்கர் சா்வதேச மையத்தில் ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆா்எஸ்எஸ் அமைப்பு நாட்டுக்கு அளித்த பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நினைவு அஞ்சல் தலை மற்றும் 100 ரூபாய் நினைவு நாணயத்தை பிரதமா் மோடி வெளியிட்டார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: தேசத்துக்கு தான் முன்னுரிமை என்ற கொள்கையில் ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் 100 ஆண்டு பயணம் என்பது தியாகம், தன்னலமற்ற சேவை, நாட்டை கட்டமைத்தல் மற்றும் ஒழுக்கத்துக்கான எடுத்தக்காட்டாக உள்ளது. ஆர்எஸ்எஸ் பல துணை அமைப்புகளை கொண்டுள்ளார். ஆனால் அந்த அமைப்புகள் ஒருபோதும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக செயல்பட்டது இல்லை. அதேபோல் பிளவுப்பட்டதும் இல்லை.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஆர்எஸ்எஸ்ஸில் உள்ள அனைத்து அமைப்புகளின் முதன்மை நோக்கம் ஒன்று தான். ‛‛தேசம் தான் முதல்' என்பது தான் அனைத்து அமைப்புகளின் நோக்கமாக இருக்கிறது. இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. ‛நான்' என்ற எண்ணத்தை ‛நாம்' என சொல்ல கற்றுக்கொடுக்கும் அமைப்பாக ஆர்எஸ்எஸ் உள்ளது.
ஆர்எஸ்எஸ் இந்த 100 ஆண்டுகளில் எண்ணற்ற தியாகங்களை செய்துள்ளது. ஒரே பாரதம் - உன்னத பாரதம் என்ற ஒரே குறிக்கோளை இப்போது முன்னெடுத்து வருகிறது. பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும் ஆர்எஸ்எஸ் தனது கொள்கையை விட்டு கொடுக்காமல் இன்றும் வலுவாக இருக்கிறது. நாட்டிற்கும், சமூகத்திற்கும் அயராது சேவை செய்து வருகிறது'' என்றார்.
-
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது! -
ராஜ்யசபா எம்.பியாகும் அன்புமணி.. மிக இளம் வயது கேபினட் அமைச்சர் - அட்டெண்டென்ஸ் சர்ச்சை.. யார் இவர்?












Click it and Unblock the Notifications