மனிதம் ததும்பும் செயல்..பிறந்து ஒரு நாளான குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த ஸபூரா ஸர்கர்!.. யார் இவர்?
டெல்லி: டெல்லியில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து ட்விட்டரில் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் பெற்றுள்ளார் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவ போராளி ஸபூரா ஸர்கர்.
கொரோனா பெருந்தொற்று இந்தியாவையே உலுக்கி வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து அவர் ஒரு குழந்தையை பெற்றெடுத்துவிட்டு உயிரிழந்துவிட்டார். தாய்ப்பால் வாசத்தையே அறியாத அந்த பிஞ்சு குழந்தைக்கு தாய்ப்பாலை தானமாக அளிக்க பாலூட்டும் ஒரு தாய் தேவைப்படுகிறார், தயவு செய்து உதவுங்கள் என மூத்த பத்திரிகையாளர் மனிஷா மொன்டால் தனது ட்விட்டரில் கேட்டிருந்தார்.

பாராட்டு
இதை பார்த்ததும் நான் இருக்கிறேன் என இளம்தாயான ஸபூரா ஸர்கர் முன்வந்துள்ளார். அந்த குழந்தைக்கு பாலூட்ட நான் தயார் என பதில் ட்வீட் அளித்திருந்தார். ஸபூராவின் இந்த மனிதநேயத்தை ட்விட்டரில் பார்த்த ஏராளமானோர் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

பல்கலைக்கழகம்
பலர் நெகிழ்ச்சியில் அற்புதமான மனிதர் நீங்கள் என அவரை பாராட்டியுள்ளார்கள். இவர் யார் என்பதை பார்ப்போம். காஷ்மீரைச் சேர்ந்த ஸபூரா ஸர்கர், ஒரு மாணவ போராளி. இவர் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் படிக்கும் மாணவி.

குடியுரிமை திருத்தச் சட்டம்
இவர் ஜாமியா ஒருங்கிணைப்பு கமிட்டியின் மீடியா ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்தவர் இவர். இதன் காரணமாக வயிற்றில் கருவைச் சுமந்தபடி பல மாதங்கள் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருமணம்
இவர் சிறையில் இருந்த போது இவரது திருமணம் குறித்தும், இவரது வயிற்றில் இருந்த சிசு குறித்தும் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் வெளிவந்தன. ஆனால் தனது ஒற்றை ட்வீட் மூலம் அனைத்தையும் துவம்சம் செய்து விட்டார் ஸபூரா.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications