இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது உண்மையா?... ஷாக் ரிப்போர்ட்
Recommended Video

டெல்லி: பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பகுதியில் எந்தவித சேதமும் இன்றி உள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதற்கு இந்திய விமானப்படை பதிலடி தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அதற்கான ஆதாரங்களையும், எத்தனை தீவிரவாதிகள் உயிரிழந்தனர் என்பதை தெரிவிக்குமாறும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் கேள்வி, இந்திய விமானப்படை மீது சந்தேகப்படுவதற்கு சமம் என்று பதிலளித்தார்.

படங்கள் வெளியீடு
இந்த நிலையில், சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் , செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டு, அதில் பாலக்கோடு அருகே இஸ்லாமிய மத பயிற்சி பள்ளியான மதரஸா அமைந்துள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
|
பிரதமர் சொல்வது உண்மையா?
பாலக்கோட்டில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆனால், இந்த செயற்கைக்கோள் படங்கள் அவரின் கூற்றை பொய்யாக்கி உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எந்தவித சேதமும் இல்லை
பாலக்கோட்டில் தீவிரவாத முகாம்கள் இல்லை என்றும் அங்கு உள்ள மதரஸாக்களிலும் எந்தவித சேதமும் அடையவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மதரஸாக்களின் மொத்தம் ஆறு கட்டிடங்களும், நல்ல நிலையில் உள்ளன என்றும் மரங்களும் எதுவும் சேதமடையாமல் உள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகம்
மதரஸா பள்ளியை ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் நடத்தி வருகிறது என கூறப்படுகிறது, இந்த செயற்கைக்கோள் படம் இந்திய தொடர்பான சந்தேகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி உள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது .

நம்பப் போவதில்லை
இதற்கிடையே , இந்திய விமானப்படை தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் சடலங்களை கண்முன்னே காட்டாத வரையில் விமானப்படை தாக்குதலை நம்பப் போவதில்லை என புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் ஒருவரான ராம் வக்கீல் என்பவரின் 80 வயது தாயார் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications