சவுதி சல்மானுக்கு மாஸ் வரவேற்பு.. ராணுவம் முதல் மருத்துவம் வரை.. 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா வந்திருக்கும் சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் இன்று மிக முக்கியமான ஒப்பந்தங்களை கையெழுத்திட இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: இந்தியா வந்திருக்கும் சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் இன்று 5 மிக முக்கியமான ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். பாதுகாப்பு தொடங்கி பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.
சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் தற்போது தெற்காசிய பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் அவர் பாகிஸ்தான் சென்றார். பாகிஸ்தானில் அவர் பல முக்கிய ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார்.
1.40 லட்சம் கோடி ரூபாய்க்கு அவர் பாகிஸ்தானில் ஒப்பந்தங்களை செய்தார். இந்த நிலையில்தான் சல்மான் தற்போது இந்தியா வந்து இருக்கிறார்.
நேற்று வந்தார்
முதலில் சல்மான் நேரடியாக பாகிஸ்தானில் இருந்து நேற்று காலையே இந்தியா வருவதாக இருந்தது. ஆனால் புல்வாமா தாக்குதல் காரணமாக இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இதையடுத்து சல்மான் நேற்று சவுதி தலைநகர் ரியாத் சென்றுவிட்டு பின் நேற்று இரவு 9.20 மணிக்கு இந்தியா வந்தடைந்தார்.
இன்று வரவேற்பு
நேற்றே பிரதமர் மோடி சல்மானுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார். இந்த நிலையில் இன்று முகமது பின் சல்மானுக்கு ராஷ்டிரபதி பவனில் மிக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ராணுவ படைகளின் அணிவகுப்புடன் மரியாதை அளிக்கப்பட்டது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்த நிகழ்வில் உடன் இருந்தார்.
விருந்து
இன்று மதியம் பிரதமர் மோடி, சல்மானுக்கு மிகப்பெரிய விருந்து அளித்தார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸில் விருந்து அளித்தார். இதற்கான பெரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொதுவாக மோடி இங்கு முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே விருந்து அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன ஒப்பந்தம்
நேற்றே பிரதமர் மோடி சல்மானுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார். இந்த நிலையில் இன்று முகமது பின் சல்மானுக்கு ராஷ்டிரபதி பவனில் மிக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ராணுவ படைகளின் அணிவகுப்புடன் மரியாதை அளிக்கப்பட்டது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்த நிகழ்வில் உடன் இருந்தார்.