கர்நாடகா: 15 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.. பரபரத்த விவாதங்கள்!
Recommended Video
டெல்லி: கர்நாடகத்தில் 15 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி சார்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சி அமைக்கப்பட்டது. இரு கட்சிகளின் எம்எல்ஏக்களிடையே அமைச்சர் பதவி மோகம், அதிகார போட்டி உள்ளிட்டவைகளால் கூட்டணிக்குள் கலகம் வெடித்தது.

இதையடுத்து இரு கட்சிகளைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல் போனது. 15 எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதையடுத்து ஆளுநரின் உத்தரவின் பேரில் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை குமாரசாமி நடத்தி அதில் தோல்வி அடைந்தார்.
இதனால் குமாரசாமியின் ஆட்சி ஒரே ஆண்டில் கவிழ்ந்தது. இதையடுத்து தகுதி நீக்கத்தை எதிர்த்து 15 பேரும் உச்சநீதிமன்றத்தை நாடினர். 15 தொகுதிகளுக்கும் வரும் டிசம்பர் 5ல் இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதனிடையே எடியூரப்பா பாஜக ஆலோசனை கூட்டத்தில் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது.
அதில் கர்நாடகத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சிக்கு வந்தது. இதற்கு காரணமாக இருந்த 15 எம்எல்ஏக்களும் மும்பையில் அமித்ஷா கட்டுப்பாட்டில் இருந்தனர். பாஜக ஆட்சி அமைக்க தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை தியாகம் செய்துள்ளனர். அதுதான் ஆபரேஷன் தாமரை என எடியூரப்பா பேசுவது போல் உள்ளது.
இதை பார்க்கும் போது குமாரசாமி தலைமையிலான ஆட்சியை பாஜக திட்டமிட்டு கவிழ்த்தது போல் உள்ளது. இந்த நிலையில் தகுதி நீக்க வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் சார்பில் வாதாடிய கபில் சிபல், எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து முதல்வர் எடியூரப்பாவின் ஆடியோ பதிவுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என கேட்டார்.
அதற்கு நீதிபதி ரமணா, எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்த எடியூரப்பாவின் ஆடியோ தீர்ப்பின் போது கவனத்தில் கொள்ளப்படும் என்றார். பின்னர் தகுதிநீக்க தீர்ப்பை ஒத்திவைத்தார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications