69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீடுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. இது தொடர்பான தமிழக அரசின் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு இந்திய அரசியல் சாசனம் 31பி, 31 சி பிரிவுகளின் கீழ் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு இது சாத்தியமானது.

ஆனால் இந்திரா சகானி வழக்கில், மாநிலங்கள் 50%க்குள்தான் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு முறைக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதேபோல் உச்சநீதிமன்றத்தில் சிவி காயத்ரி என்ற மாணவி சார்பாக அவரது தந்தை எஸ். வைத்தீஸ்வரன் 69% இடஒதுக்கீடு முறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.
மாணவி காயத்ரி சார்பாக வழக்கறிஞர் ஜி. சிவபால முருகன் ஆஜரானார். அப்போது, தமிழக அரசின் 69% இடஒதுக்கீடு முறையால் பொது பட்டியல் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக வழக்கறிஞர் சிவபாலமுருகன் வாதிட்டார். இதனையடுத்து 2 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications