நீதிமன்ற நிகழ்ச்சிகளில் பூஜை வேண்டாம்.. அரசியலமைப்புக்கு மரியாதை செலுத்துங்கள்! நீதிபதி வலியுறுத்தல்
டெல்லி: நீதிமன்றம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பூஜை, சடங்குகள் செய்வதை நிறுத்திவிட்டு, அரசியலமைப்பு சட்டத்திற்கு தலைவணக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓகா கூறியுள்ளார்.
கடந்த 3ம் தேதி மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட்டில் புதிய நீதிமன்ற கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றிருந்தது. இதில் பங்கேற்றிருந்த நீதிபதி ஓகா இவ்வாறு பேசியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள 'மதச்சார்பற்ற' மற்றும் 'ஜனநாயகம்' எனும் வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என குறிப்பிட்டுள்ள அவர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நீதிமன்ற நிகழ்ச்சிகளின் போது மதச் சடங்குகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நீதிமன்றம் தொடர்பான நிகழ்வுகளுக்கு பூஜைகள், சடங்குகள் செய்வதை விட, அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையின் நகலுக்குப் பணிந்து நிகழ்வுகளைத் தொடங்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து விரிவாக பேசிய அவர், "சில நேரங்களில் நீதிபதிகள் விரும்பத்தகாத விஷயங்களைச் சொல்லுவார்கள். நானும் கொஞ்சம் விரும்பத்தகாத ஒன்றைச் சொல்லப் போகிறேன். நீதிமன்றங்களில் நிகழ்ச்சிகளின் போது பூஜை-அர்ச்சனையை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு பதிலாக, அரசியலமைப்பின் முகப்பு படத்தை வைத்து வணங்க வேண்டும். அரசியலமைப்பு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் கண்ணியத்தை தக்க வைத்துக் கொள்ள இந்த புதிய நடைமுறையை நாம் தொடங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும், "டாக்டர் அம்பேத்கர், மதச்சார்பின்மையைக் குறிப்பிடும் ஒரு சிறந்த அரசியலமைப்பை நமக்கு வழங்கியுள்ளார். நமது நீதிமன்ற அமைப்பு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அது நமது அரசியலமைப்பால் நடத்தப்படுகிறது. நான் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தபோது, நீதிமன்ற வளாகங்களில் இதுபோன்ற மதப் பழக்க வழக்கங்களைக் குறைக்க முயன்றேன். ஆனால் அவற்றை முழுமையாகத் தடுக்க முடியவில்லை" என்றும் நீதிபதி அபய் எஸ் ஓகா கூறியுள்ளார்.
சமீப நாட்களாக மத செயல்பாடுகள் அரசியல் முழக்கங்களாக முன்வைக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை எதிர்த்து கேள்வி எழுப்பவர்கள் மீது அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் நீதிபதி அபய் எஸ் ஓகாவின் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications