உ.பி. அரசால் சிறை-கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பானுக்கு சிகிச்சை அளிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு
டெல்லி: உத்தரப்பிரதேச அரசால் சிறையில் அடைக்கப்பட்ட கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பானுக்கு டெல்லி மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசில் பலாத்கார சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற சித்திக் கப்பானுக்கு தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி உ.பி. பாஜக அரசு அவரை சிறையில் அடைத்தது. மேலும் சித்திக் கப்பான் மீது பல்வேறு வழக்குகளையும் சரமாரியாக போட்டது உ.பி. பாஜக அரசு.
இந்த நிலையில் சிறை கழிப்பறையில் சித்திக் காப்பான் தவறி விழுந்ததால் காயமடைந்த நிலையில் மதுரா சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என உத்தரப்பிரதேச அரசு தெரிவித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்திக் காப்பான் சிறையில் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார் என்பதும் இதன் மூலம் அம்பலமானது.
ஏற்கனவே சித்திக் கப்பானுக்காக கேரளா பத்திரிகையாளர் சங்கம் ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நிலையில் அவர் காயமடைந்தார் என்கிற செய்தியைத் தொடர்ந்து உரிய சிகிச்சை அளிக்க கோரி மற்றொரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அல்லது ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் சித்திக் கப்பானுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு மத்திய பாஜக அரசு ஆட்சேபனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications