ராமர் பாலத்தை கண்ணார பார்க்க சுவர் கட்டி கொடுங்க.. கடுப்பான உச்சநீதிமன்றம்- பொதுநலன் மனு டிஸ்மிஸ்!
டெல்லி: தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையே ராமர் பாலத்தை பார்த்து வணங்கும் வகையில் சுவர் எழுப்ப வேண்டும் என கோரி தாக்கல் செய்த பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கை இடையே கடலில் சுண்ணாம்பு பாறை திட்டுகள் ஒரே தொடர்ச்சியாக இருக்கின்றன. இதனை புராண இதிகாசங்களுடன் தொடர்புபடுத்தி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ராமரால் இலங்கைக்கு கட்டப்பட்ட பாலம் என கூறப்படுகிறது. இதனாலேயே இது ராமர் பாலம் அல்லது ராம் சேது என அழைக்கின்றனர்.

அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்படாத நிலையில் சேதுக் கால்வாய் திட்டத்துகாக இந்த பகுதியை ஆழப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ராமர் பாலம் சேதமடைந்துவிடும் என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சர்ச்சையின் போதுதான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என கேள்வி எழுப்பினார். இதற்காக கருணாநிதியை தலையை சீவுவோருக்கு பரிசு தரப்படும் என இந்து சாமியார் ஒருவர் அறிவித்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பின்னர் ராமர் பாலம் இருப்பதை காரணம் காட்டியே சேதுக்கால்வாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டு கைவிடப்பட்டது. ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக பாஜக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பலர் வழக்கும் தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் இந்து சட்ட ஆணையம் சார்பில் அசோக் பாண்டே என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ராமர் பாலத்தை பொதுமக்கள் வணங்கும் வகையில் சுவர் கட்டித்தர உத்தரவிட வேண்டும் என அப்பொதுநலன் வழக்கில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் உச்சநீதிமன்றர் நீதிபதிகள் சஞ்சய் கிருஷ்ணன் கவுல், சுதான்ஷு தூலியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது, ஒரு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதில் தலையிடுவது எல்லாம் நீதிமன்றத்தின் வேலையா என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதனையடுத்து அப்பொதுநலன் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிஸ்மிஸ் செய்தனர். மேலும் இது தொடர்பாக மத்திய அரசை அணுகலாம் எனவும் மனுதாரரு9க்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications