ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பான வழக்கு- ஆகஸ்டில் இறுதி விசாரணை
டெல்லி: ஒரே வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கின் இறுதி விசாரணை அடுத்த மாதம் வரவுள்ளது.
ஒரு வேட்பாளர் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 33 (7)-ஆவது பிரிவின்படி இரு தொகுதிகளில் பொதுத் தேர்தலிலும், இடைத் தேர்தலிலும் அல்லது சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடலாம் என அனுமதிக்கிறது. ஆனால், அதே சட்டத்தின் 70-ஆவது பிரிவு அவ்வாறு போட்டியிடும் நபர் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கிறது.

இந்நிலையில் ஒரே நபர் இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிப்பது, அரசமைப்புக்கு எதிரானது கூறி பாஜகவின் செய்தித் தொடர்பாளரும், வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையமும் பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் ஒரு நபர் ஒரு தொகுதியில் போட்டியிடும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த 2004, 2016 ஆகிய ஆண்டுகளில் மத்திய அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பியுள்ளன.
இது தொடர்பாக மத்திய அரசுதான் செயலாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் மனுவில் கூறப்பட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில் ஒரு நபர் இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிப்பது ஜனநாயகபூர்வமானதுதான் என்றும் மனுதாரர் அஸ்வினி உபாத்யாய இது தொடர்பாக வாக்காளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பாக எதுவும் அவரது மனுவில் தெரிவிக்கவில்லை.
எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை திருத்துமாறு நீதிமன்றத்தை கேட்கக் கூடாது என மத்திய அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications