குடியரசு தினத்தில் விவசாயிகளின் 1 லட்சம் டிராக்டர் பேரணி- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
டெல்லி: டெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்தும் 1 லட்சம் டிராக்டர் பேரணிக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெறுகிறது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடனான அனைத்து கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

உச்சநீதிமன்றமும் மத்திய அரசின் விவசாய சட்டங்களை செயல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது. அதேநேரத்தில் 4 பேர் கொண்ட வல்லுநர் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது. ஆனால் இந்த 4 பேரும் விவசாய சட்டங்களை ஆதரிப்பவர்கள் என்பதால் இக்குழுவை விவசாயிகள் ஏற்கவில்லை.
மேலும் இக்குழுவில் 3 பேரை நீக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் சங்கத்தினர் மனுத்தாக்கல் செய்தனர். அத்துடன் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் 1 லட்சம் டிராக்டர்களில் பேரணி நடத்துவோம் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இதற்காக பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டர்களில் புறப்பட்டுள்ளனர். இந்த டிராக்டர் பேரணிக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் டெல்லி போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர். குடியரசு தினநாளில் டெல்லியில் எந்த இடத்திலும் எந்த ஒரு போராட்டத்துக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்பது டெல்லி போலீசின் மனு.
இம்மனு மீதும் வல்லுநர் குழுவில் 3 பேரை நீக்க கோரும் மனு மீதும் உச்சநீதிமன்றத்தில் நாளை திங்கள்கிழமையன்று விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையின் முடிவில் ஜனவரி 26-ந் தேதி போராட்டம் தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications