சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்ட வழக்கு- உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இதுதான்!
டெல்லி: சென்னை- சேலம் 8 வழி நெடுஞ்சாலை திட்டத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் விவசாயிகளுக்கு சில சாதகமான அதேநேரத்தில் அரசுக்கும் சாதகமான அம்சங்களை தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை, தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கான்வில்கர் தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- சென்னை- சேலம் 8 வழிசாலைக்கு "நிலம் கையகப்படுத்த" சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும்
- சென்னை- சேலம் 8 வழிச் சாலைக்கு கையகப்படுத்திய நிலங்களை திருப்பி விவசாயிகளிடம் தர வேண்டும்.
- பொதுவாக திட்டங்களுக்கு மத்திய,மாநில அரசுகள் நிலத்தை கையகப்படுத்த உரிமை உள்ளது
- சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை.
- சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கான புதிய அறிவிக்கையை நெடுஞ்சாலை துறை வெளியிடலாம்.
- புதிய அறிவிக்கை வெளியிட்ட பின் மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை தொடரலாம்
- சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு சுற்றுச் சூழல் அனுமதி பெற வேண்டும்.
- சுற்றுச் சூழல் அனுமதி இல்லாமல் சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த கூடாது
- சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டம் தொடர்பாக மக்களிடமும் கருத்து கேட்க வேண்டும்
அடுத்து என்ன நடக்கும்?
சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டால் அதில் உள்ள பாதக அம்சங்களை முன்வைத்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடரலாம். அந்த வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்து இத்திட்டம் அமல்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications