துணிச்சலான தலைமை நீதிபதி என்.வி. ரமணா.. கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த மூத்த வழக்கறிஞர்கள்!
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், துஷ்யந்த் தவே, துஷார் மேத்தா ஆகியோர் பிரியாவிடை அளித்தனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.பாப்டே ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அது ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன், உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக, என்.வி. ரமணா கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவியேற்றார். இவரது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது

இன்றுடன் பணி ஓய்வு பெறும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்றும் நேற்று முன்தினமும் பல முக்கிய வழக்குகளை விசாரித்தார். மேலும், உச்சநீதிமன்றத்தில் இதுவரை இல்லாத வகையில் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவை சிறப்பிக்கும் வகையில் முதல்முறையாக அவரது தலைமையிலான பெஞ்ச் விசாரிக்கும் வழக்குகள் இன்று நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் 71 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக வழக்கு விசாரணைகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
இன்றுடன் ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாவுக்கு மூத்த வழக்கறிஞர்கள் பிரியா விடை அளித்தனர். மூத்த வழக்கறிஞரான கபில் சிபல், துஷ்யந்த் தவே, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பிரியாவிடை அளித்தனர். இதில் பேசிய வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த நாட்டின் ஏராளமான குடிமக்கள் சார்பாக நான் பேசுகிறேன். நீங்கள் மக்களுக்காக எழுந்து நின்றார். அவர்களின் உரிமைகளையும் அரசியலமைப்பையும் நிலைநாட்டினார்.
நீதித்துறை மற்றும் நாடாளுமன்றம் இடையில் அதிகாரத்தில் சமநிலையை பேணி வந்தீர்கள். என்வி ரமணா முதுகெலும்பு உள்ள நபராக துணிச்சலுடன் செயல்பட்டவர் என்று பாராட்டு தெரிவித்தார். துஷார் மேத்தா அவர் பேசி முடித்துவிட்டு உணர்ச்சிப் பெருக்கில் கண் கலங்கினார்.
தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பேசுகையில், பரபரப்பான நேரங்களிலும் சமநிலையை பேணுவதற்கு அவர் ஆற்றிய பணிக்காக நீதிமன்றம் அவரை என்றும் நினைவில் கொள்ளும். நீதிபதிகளின் குடும்பத்தையும் ரமணா நன்றாக கவனித்து வந்தார். இந்த நீதிமன்றத்தின் கண்ணியமும் ஒருமைப்பாடும் பேணப்படுவதை உறுதி செய்துள்ளீர்கள் என்று தெரிவித்தார்.
-
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications