ஆக்ஸ்போர்டின் கொரோனா வேக்சின் மனித சோதனையை இந்தியாவில் மீண்டும் நடத்த சீரம் நிறுவனத்துக்கு அனுமதி
டெல்லி: இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா வேக்சினை மனிதர்களுக்கு செலுத்தும் சோதனையை இந்தியாவில் மீண்டும் நடத்த சீரம் (Serum Institute of India) நிறுவனத்துக்கு மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை எட்டுகிறது. கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா மருந்து
பல நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்புகளில் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவே கூறி வருகின்றன. இங்கிலாந்தும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஆக்ஸ்போர்ட் வேக்சின்
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம்- ஆஸ்டர்செனகா நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து AZD1222 வேக்சினை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே 2 கட்டங்களாக இங்கிலாந்தில் வெற்றிகரமாக இந்த மருந்தை வைத்து சோதனை நடத்தப்பட்டுவிட்டது.

சோதனைகள் நிறுத்தம்
ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தை வைத்து Serum Institute of India இந்தியாவில் மனிதர்களுக்கு சோதனைகளை நடத்தி வருகிறது. இங்கிலாந்தில் இம்மருந்தை பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனைகளில் திடீரென நோயாளிகளுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

சோதனைகளுக்கு அனுமதி
பின்னர் இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை தொடங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த சோதனையை தொடருவதற்கு Serum Institute of India- சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்துக்கு மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மீண்டும் கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications