Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 மாதத்துக்கு கடும் வெயில்..இந்த 10 மாநிலங்களில் சுட்டெரிக்கும்..வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் மிருத்யுஞ்சய் மகாபத்ரா கூறியுள்ளார். அதேபோல மழையை பொறுத்தவரை, இந்த ஏப்ரல் மாதம் இயல்பான அளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடப்பு ஆண்டில் வெயில் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வாட்டி வதைக்க தொடங்கியது.

கடுமையான வெப்பம் அப்போதே தகிக்கத் தொடங்கியதால் நடப்பு ஆன்டு மே, ஜூன் மாதங்களில் வெயில் எப்படி இருக்குமோ என மக்கள் எண்ணாமலும் இல்லை. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் பிப்ரவரி மாதமே இருந்து வருகிறது.

 இயல்பை விட அதிகமாக இருக்கும்

இயல்பை விட அதிகமாக இருக்கும்

இந்த நிலையில் இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் மிருத்யுஞ்சய் மகாபத்ரா கூறியதாவது:- நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான கோடை காலத்தில் நாட்டில் பெரும்பாலான இடங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும்.

சமவெளி பகுதியில் 40 டிகிரி..

சமவெளி பகுதியில் 40 டிகிரி..

தென் இந்திய தீப கற்ப பகுதிகள் மற்றும் வடமேற்கு இந்திய பகுதிகளில் வெப்ப நிலை இயல்பான அளவு அல்லது அதை விட குறைவான அளவு இருக்க வாய்ப்பு உள்ளது. பீகார், ஜார்க்கண்ட், உத்திர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஷ்கர், மகாராஷ்டிரா, குஜராத் , பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை அதிக நாட்கள் வீசும். சமவெளி பகுதியில் வெப்ப நிலை குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.

வெப்ப அலை என்றால் என்ன?

வெப்ப அலை என்றால் என்ன?

சமவெளி பகுதியில் வெப்ப நிலை குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கும், கடலோரப்பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ் அளவிற்கும், மலைப்பிரதேசங்களில் 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் வெப்பம் தகித்தால் அது வெப்ப அலை என்று சொல்லப்படுகிறது. நமது நாட்டில் கடந்த 1901- ஆம் ஆண்டில் இருந்து வெப்ப நிலை பதிவு செய்யப்பட்டு வருகிறது. அப்போது முதல் பிப்ரவரி மாதத்தில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவானது நடப்பு ஆண்டில் தான் பதிவானது குறிப்பிடத்தக்கது.

வழக்கமான அளவு மழை பெய்யும்

வழக்கமான அளவு மழை பெய்யும்

அதேபோல மழையை பொறுத்தவரை, இந்த ஏப்ரல் மாதம் இயல்பான அளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வட மேற்கு, மத்திய மற்றும் தீபகற்ப பகுதிகளில் மழையின் அளவு இயல்பான அளவிலோ அல்லது இயல்பை விட கூடுதலாகவோ இருக்கக்கூடும். வடகிழக்கு இந்தியாவில் வழக்கமான அளவு மழை பெய்யும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+