ராகுல் காந்தியை இன்று நேரில் சந்தித்தார் சித்தராமையா.. அடுத்த மூவ்?.. கர்நாடகாவில் நீளும் இழுபறி
டெல்லி: கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் தேர்வு குறித்து தொடர் இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசியுள்ளார் சித்தராமையா.
கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135 தொகுதிகளை கைப்பற்றி மாஸ் காட்டியது. ஆனால் அதன் பின்னர்தான் முக்கிய பிரச்னையே தலை தூக்கியது. அதாவது மாநிலத்தின் முதலமைச்சராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதுதான் இந்த புதிய குழப்பம். கட்சி பலவீனமாக இருந்த காலத்தில் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர் அதன் மாநில தலைவர் டி.கே.சிவகுமார். மட்டுமல்லாது இவர் சார்ந்து இருக்கும் ஒக்கலிகர் சமூகத்தினரின் ஓட்டுக்களும் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமாக கிடைத்திருந்தது.

வழக்கமாக இந்த சமூகத்தினரின் வாக்குகள் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்குதான் செல்லும். இதனை காங்கிரஸ் பக்கம் மடைமாற்றி விட்டதில் சிவகுமாரின் பங்கு அளப்பரியது. அதேபோல அரசியலிலும் இவர் சீனியர்தான். எனவே இந்த விஷயங்களை சொல்லி தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மறுபுறம் சித்தராமையா அரசியலில் சூப்பர் சீனியர். ஏறத்தாழ 9 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மட்டுமல்லாது தனக்கு வயது 75 ஆகிறது. இனி நான் அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. அரசியலில் அதிகார பயணத்தை நான் இறுதி கட்டத்திற்கு கொண்டு வந்துவிட்டேன்.எனவே இந்த ஒருமுறை எனக்கு முதலமைச்சர் பதவியை கொடுங்கள் என்று கோரியுள்ளார்.
இது தவிர காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களில் அதிகமானோர் இவருக்குதான் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் என்ன செய்வதென்று கட்சி மேலிடம் குழம்பி வருகிறது. முதலமைச்சரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சி தலைவர் மல்லிகர்ஜுன கார்கேவுக்குதான் என்று ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், கார்கே மாநில தலைவர் சிவகுமாரையும், சித்தராமையாவையும் டெல்லிக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சித்தராமையா நேரில் சென்று சந்தித்திருக்கிறார். உடன் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் இருந்துள்ளனர். இதன் பின்னர் டி.கே.சிவகுமாரும் ராகுல் காந்தியை தனியாக சந்தித்து பேசுகிறார்.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications