சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் உடல்நலக் குறைவால் காலமானார்
டெல்லி: சமூக ஆர்வலரும் ஆரிய சமாஜம் அமைப்பின் தலைவருமான சுவாமி அக்னிவேஷ் (வயது 80) உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார்.
ஆந்திராவின் ஶ்ரீகாகுளத்தில் 1939-ம் ஆண்டு பிறந்தவர் சுவாமி அக்னிவேஷ். இன்றைய சத்தீஸ்கரில் இருந்த சக்தி மாகாண திவானாக பணியாற்றிய தாத்தாவின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டார் அக்னிவேஷ்.
கொல்கத்தா செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பின்னாளில் பணியாற்றிய சப்யாசாச்சி முகர்ஜியிடம் ஜூனியர் வழக்கறிஞராகவும் பயிற்சி பெற்றார்.

1970களில் ஆரிய சமாஜ் அமைப்பின் கொள்கைகளை பின்பற்றி ஆரிய சபா என்ற தனிக்கட்சியை தொடங்கியவர் சுவாமி அக்னிவேஷ். (1875-ல் சுவாமி தயானந்த சரஸ்வதியால் தொடங்கப்பட்டது ஆரிய சமாஜ். 2004-2014ல் இதன் அகில உலக தலைவராகவும் இருந்தார் சுவாமி அக்னிவேஷ்.).
ஹரியானாவில் 1977-ல் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1979ல் அம் மாநில கல்வித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் அக்னிவேஷ். நாடு முழுவதும் கொத்தடிமை தொழிலாளர்களை மீட்பதில், பெண்சிசு கொலை தடுப்பில் முனைப்புடன் பணியாற்றியவர். கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு 14 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். பின்னர் இந்த வழக்கில் இருந்து அக்னிவேஷ் விடுதலை செய்யப்பட்டார்.
அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தொடக்கத்தில் இணைந்து பணியாற்றினார். பின்னர் கருத்து வேறுபாடுகளால் அன்னா ஹசாரேவிடம் இருந்து விலகினார் அக்னிவேஷ்.
2011-ல் மாவோயிஸ்டுகளுக்கும் அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கான தூதராகவும் பணியாற்றினார் சுவாமி அக்னிவேஷ். 2011-ல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 நாட்கள் சுவாமி அக்னேஷ் கலந்து கொண்டிருந்தார்.

காவி உடை அணிந்திருந்த ஆன்மீகவாதியாக இருந்தாலும் மதச்சார்பின்மையை வலியுறுத்தியவர். மத்திய பாஜக அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலைக்கு எதிரான போராட்டங்களை நடத்தினார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்டவைகளை கடுமையாக எதிர்த்தார். இதனால் இந்துத்துவா அமைப்பினரால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுவாமி அக்னிவேஷ் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது.
அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவர் டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சுவாமி அக்னிவேஷ் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications