ஏகே-47லிருந்து வரும் குண்டு போல பொய் சொல்கிறார்கள்.. எதிர்க்கட்சிகளின் மீது மோடி விமர்சனம்!
எதிர்க்கட்சியினர் எல்லோரும் ஏகே-47 துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டுகளின் வேகத்திற்கு பொய்களை கூறி வருகின்றனர் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
டெல்லி: எதிர்க்கட்சியினர் எல்லோரும் ஏகே-47 துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டுகளின் வேகத்திற்கு பொய்களை கூறி வருகின்றனர் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
இந்தியா ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்காக பரபரப்பாகி உள்ளது. தெலுங்கானா, மத்திய பிரதேம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது.
இதனால் தற்போது பல கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த தேர்தல்கள் குறித்து கட்சியினர் மத்தியில் டெல்லியில் பேசினார்.
[மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!]

கூட்டணி
பிரதமர் மோடி தனது பேச்சில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து பாஜகவினர் கவலைப்பட கூடாது. அவர்களால் வெற்றிபெற முடியாது. அவர்களை மக்கள் விரும்ப மாட்டார்கள். அவர்களை மக்கள் வெறுக்கவே செய்வார்கள். அந்த பிரம்மாண்ட கூட்டணி மக்களுக்கும், வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் எதிராக உள்ளது.

ஐந்து மாநிலம்
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகதான் வெற்றிபெறும். ஒரு மாநிலத்திலும் பாஜக தோல்வி அடையாது. எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தை பார்க்க மக்கள் செல்வதற்கு ஒரே காரணம்தான் உள்ளது. அங்கு எல்லோரும் காமெடியாக பேசுகிறார்கள். அதை பார்த்து சிரிக்கவே மக்கள் செல்கிறார்கள்.

தவறான புகார்
ரபேல் வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாற்றி மாற்றி பேசி வருகிறார். தினமும் வெவ்வேறு தொகையை சொல்லி மக்களை குழப்பி வருகிறார். அவரை போலவே மற்ற எதிர்கட்சியினரும் பேசுகிறார்கள். மக்கள் இதை எல்லாம் நம்ப மாட்டார்கள்.

பொய் சொல்கிறார்கள்
எதிர்க்கட்சியினர் எல்லோரும் ஏகே-47 துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டுகளின் வேகத்திற்கு பொய்களை கூறி வருகின்றனர். மக்கள் இதை கவனமாக கையாள வேண்டும். இப்போது உண்மைகளை தெரிந்து கொள்ள நிறைய வாய்ப்புள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications