மத, மொழி சிறுபான்மையினரை மாநிலங்களே அறிவிக்கலாம்... உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு
டெல்லி: மத, மொழி அடிப்படையில் சிறுபான்மையினர்கள் யார் என மாநில அரசுகளே அறிவிக்க முடியும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா இந்துக்கள் குறைவாக உள்ள மாநிலங்களில் அவர்களை சிறுபாண்மையினர்களாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
நாட்டில் பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்கள், சில மாநிலங்களில் சிறுபான்மையினர்களாக இருப்பதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையின் அவர் மனுத்தாக்கல் செய்தார்.

இந்துக்கள் குறைவாக உள்ள மாநிலங்கள்
அந்த மனுவில், "2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், அருணாச்சல பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்துக்கள் குறைவான எண்ணிக்கையில் வசித்து வருகிறார்கள். அவர்களை 2002 டி.எம்.ஏ. பாய் வழக்கின்படி சிறுபான்மையினர்களாக அறிவிக்க வேண்டும்.

சிறுபான்மையினருக்கான பலன்கள் கிடைக்க வேண்டும்
இந்த மாநிலங்களில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு தேசிய மக்கள் தொகை சதவீதத்தின் காரணமாக சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளும் அதனால் வரும் பயன்கள் கிடைக்காமல் இருக்கின்றன. எனவே மாநில அளவில் சிறுபான்மையினர்கள் யார் என்று அடையாளம் கண்டு அறிவிக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டு இருந்தார்.

மத்திய அரசு பதில் மனு
இந்த வழக்கு மீதான பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், "யார் சிறுபான்மையினர் என்று அடையாளம் காண்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஒருங்கிணைந்த பட்டியலின் கீழ் வருகிறது. எனவே மத்திய அரசு போல் மாநில அரசுகளும் யார் சிறுபான்மையினர் என தங்கள் மாநில வரம்புக்குள் சட்டம் இயற்ற முடியும். மத மற்றும் மொழி சிறுபான்மையினர் நாடு முழுவதும் பரவி இருக்கின்றனர். பெரும்பான்மையாக ஒரு மாநிலத்தில் வசிப்பவர்கள் மற்ற மாநிலங்களில் சிறுபான்மையினராக உள்ளனர்.

முன்னுதாரணமாக விளங்கும் மகாராஷ்டிரா, கர்நாடகா
கர்நாடகாவில் தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம், துளு, லம்பாடி, இந்தி, கொங்கணி, குஜராத்தி, மராத்தி மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களை மொழி சிறுபான்மையினராக அம்மாநில அரசு அறிவித்து இருக்கிறது. அதேபோல் மகாராஷ்டிராவில் யூத மதத்தவர்களும்ம் சிறுபான்மையினத்தவர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications