விசாரணை முடிந்தது.. ஒரு வாரத்தில் ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு.. தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
டெல்லி: ஸ்டெர்லைட் வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக் கிழமை ஸ்டெர்லைட் வழக்கு விசாரணைக்கு வந்த போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் திங்கட் கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இந்தநிலையில் இன்று இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது, ஸ்டெர்லைட் வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்கக்கோரி வைகோ கடும் வாதம் செய்தார்.
இந்தநிலையில், நிலத்தடி நீர் மாசு பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை. தூத்துக்குடியில் மோசமான நிலைமைக்கு நிலத்தடி நீர் செல்வது பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை. நிலத்தடி நீர் மாசு காரணமாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தகவல் அளித்தது. ஆனால், 2014 - 2018 வரை நோட்டீஸ் எதுவும் அனுப்பப்பட்டதா? தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மீண்டும் நூறுகோடி ரூபாய் தருவதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வாதிட்டுள்ளது
வாதங்கள் முடிவடைந்ததையடுத்து ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications