என்ன இது இப்படியெல்லாம் சொல்லிருக்கே பசுமை தீர்ப்பாய தீர்ப்பு.. அதிர வைக்கும் அம்சங்கள்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு
டெல்லி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மே 28ம் தேதி தமிழக அரசு, மூடி சீல் வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, வேதாந்தா குழுமம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
- ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது
- ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தை மூன்று வாரங்களுக்குள் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க வேண்டும்
- ஆலைக்குத் தேவையான மின்சார வசதியை உடனடியாக கொடுக்க வேண்டும்
- ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்
- ஆலையை திறக்கும் நடவடிக்கையை மாவட்ட கலெக்டர் மேற்பார்வை செய்ய வேண்டும். உறுதி செய்ய வேண்டும்.
- ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ரூ.100 கோடி வழங்குவதற்கு வேதாந்தா குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications