Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெகாசஸ்: மத்திய அரசு மீது தவறு உறுதியானால் பிரதமர் மோடிக்கு சிக்கல்தான்...எச்சரிக்கிறாராம் சு.சுவாமி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டு கேட்ட விவகாரத்தில் மத்திய அரசு மீது தவறு உறுதியானால் பிரதமர் மோடி விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ராஜ்யசபா எம்.பி.யும் பாஜகவை சேர்ந்தவருமான சுப்பிரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலிய நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. பயங்கரவாதிகளின் செல்போன்களை ஹேக்செய்து சதித் திட்டங்களை முறியடிக்க இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டது.

ஆனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டு கேட்கப்பட்டதால் பல நாடுகளில் பிரளயம் வெடித்தன. இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன.

கொந்தளித்த எதிர்க்கட்சிகள்

கொந்தளித்த எதிர்க்கட்சிகள்

இதனால் பெகாசஸ் மென்பொருள் மூலமான ஒட்டு கேட்பு விவகாரம் இந்தியாவிலும் பூதாகரமாக வெடித்தது. இது தொடர்பாக மத்திய பாஜக அரசு விளக்கம் தரக் கோரி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. உச்சநீதிமன்றத்திலும் அதன் கண்காணிப்பிலான விசாரணை கோரி 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்றம் அதிரடி

உச்சநீதிமன்றம் அதிரடி

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், வல்லுநர் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. முன்னதாக இந்த விசாரணையின் போது கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு மல்லுக்கட்டியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

பிரதமருக்கு எச்சரிக்கை தரும் சு.சுவாமி

பிரதமருக்கு எச்சரிக்கை தரும் சு.சுவாமி

இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலமான கருத்தரங்கம் ஒன்றில் பேசிய ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு தவறு செய்திருந்தால் பிரதமர் மோடி அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார். மேலும் தம்முடைய செல்போன்களை ஒட்டுகேட்க மாட்டார்கள். அப்படி கேட்டால் எனது இஸ்ரேல் நண்பர்கள் எனக்கு தகவல் கொடுத்துவிடுவார்கள் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார்.

சு.சுவாமியின் குடைச்சல்

சு.சுவாமியின் குடைச்சல்

அத்துடன், பெகாசஸ் மூலம் ஒட்டுகேட்பது என கொள்கை முடிவு எடுத்திருந்தால் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் போன்றவர்கள், பிரதமர் மோடியிடம் மேலோட்டமாக ஒப்புதல் பெற்றிருந்தால் அது சிக்கலை ஏற்படுத்தும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். ஏற்கனவே பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் நாட்டு மக்களிடம் உண்மையை பிரதமர் மோடி விளக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தவரும் சுப்பிரமணியன் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+