பெகாசஸ்: மத்திய அரசு மீது தவறு உறுதியானால் பிரதமர் மோடிக்கு சிக்கல்தான்...எச்சரிக்கிறாராம் சு.சுவாமி
டெல்லி: பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டு கேட்ட விவகாரத்தில் மத்திய அரசு மீது தவறு உறுதியானால் பிரதமர் மோடி விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ராஜ்யசபா எம்.பி.யும் பாஜகவை சேர்ந்தவருமான சுப்பிரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. பயங்கரவாதிகளின் செல்போன்களை ஹேக்செய்து சதித் திட்டங்களை முறியடிக்க இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டது.
ஆனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டு கேட்கப்பட்டதால் பல நாடுகளில் பிரளயம் வெடித்தன. இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன.

கொந்தளித்த எதிர்க்கட்சிகள்
இதனால் பெகாசஸ் மென்பொருள் மூலமான ஒட்டு கேட்பு விவகாரம் இந்தியாவிலும் பூதாகரமாக வெடித்தது. இது தொடர்பாக மத்திய பாஜக அரசு விளக்கம் தரக் கோரி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. உச்சநீதிமன்றத்திலும் அதன் கண்காணிப்பிலான விசாரணை கோரி 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்றம் அதிரடி
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், வல்லுநர் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. முன்னதாக இந்த விசாரணையின் போது கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு மல்லுக்கட்டியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

பிரதமருக்கு எச்சரிக்கை தரும் சு.சுவாமி
இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலமான கருத்தரங்கம் ஒன்றில் பேசிய ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு தவறு செய்திருந்தால் பிரதமர் மோடி அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார். மேலும் தம்முடைய செல்போன்களை ஒட்டுகேட்க மாட்டார்கள். அப்படி கேட்டால் எனது இஸ்ரேல் நண்பர்கள் எனக்கு தகவல் கொடுத்துவிடுவார்கள் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார்.

சு.சுவாமியின் குடைச்சல்
அத்துடன், பெகாசஸ் மூலம் ஒட்டுகேட்பது என கொள்கை முடிவு எடுத்திருந்தால் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் போன்றவர்கள், பிரதமர் மோடியிடம் மேலோட்டமாக ஒப்புதல் பெற்றிருந்தால் அது சிக்கலை ஏற்படுத்தும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். ஏற்கனவே பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் நாட்டு மக்களிடம் உண்மையை பிரதமர் மோடி விளக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தவரும் சுப்பிரமணியன் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications