பெகாசஸ்: மத்திய அரசு மீது தவறு உறுதியானால் பிரதமர் மோடிக்கு சிக்கல்தான்...எச்சரிக்கிறாராம் சு.சுவாமி
டெல்லி: பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டு கேட்ட விவகாரத்தில் மத்திய அரசு மீது தவறு உறுதியானால் பிரதமர் மோடி விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ராஜ்யசபா எம்.பி.யும் பாஜகவை சேர்ந்தவருமான சுப்பிரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. பயங்கரவாதிகளின் செல்போன்களை ஹேக்செய்து சதித் திட்டங்களை முறியடிக்க இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டது.
ஆனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டு கேட்கப்பட்டதால் பல நாடுகளில் பிரளயம் வெடித்தன. இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன.

கொந்தளித்த எதிர்க்கட்சிகள்
இதனால் பெகாசஸ் மென்பொருள் மூலமான ஒட்டு கேட்பு விவகாரம் இந்தியாவிலும் பூதாகரமாக வெடித்தது. இது தொடர்பாக மத்திய பாஜக அரசு விளக்கம் தரக் கோரி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. உச்சநீதிமன்றத்திலும் அதன் கண்காணிப்பிலான விசாரணை கோரி 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்றம் அதிரடி
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், வல்லுநர் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. முன்னதாக இந்த விசாரணையின் போது கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு மல்லுக்கட்டியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

பிரதமருக்கு எச்சரிக்கை தரும் சு.சுவாமி
இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலமான கருத்தரங்கம் ஒன்றில் பேசிய ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு தவறு செய்திருந்தால் பிரதமர் மோடி அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார். மேலும் தம்முடைய செல்போன்களை ஒட்டுகேட்க மாட்டார்கள். அப்படி கேட்டால் எனது இஸ்ரேல் நண்பர்கள் எனக்கு தகவல் கொடுத்துவிடுவார்கள் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார்.

சு.சுவாமியின் குடைச்சல்
அத்துடன், பெகாசஸ் மூலம் ஒட்டுகேட்பது என கொள்கை முடிவு எடுத்திருந்தால் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் போன்றவர்கள், பிரதமர் மோடியிடம் மேலோட்டமாக ஒப்புதல் பெற்றிருந்தால் அது சிக்கலை ஏற்படுத்தும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். ஏற்கனவே பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் நாட்டு மக்களிடம் உண்மையை பிரதமர் மோடி விளக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தவரும் சுப்பிரமணியன் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications