சி.ஏ.ஏவுக்கு எதிரான 200 பொதுநலன் மனுக்கள்- டிச. 6-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: சி.ஏ.ஏ. எனப்படும் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான 200க்கும் மேற்பட்ட பொதுநலன் மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் இன்று விசாரணை நடத்துகிறது.
2019-ம் ஆண்டு மத்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தது. வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தினர் அதாவது இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமணர்கள், பவுத்தர்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறி இருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதுதான் இந்த சட்ட திருத்தம். இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்தால் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்கிறது இந்த சட்டம்.
அத்துடன் 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அல்லது அதற்கு முன்பாகவோ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் மட்டுமே இந்திய குடியுரிமையை பெற விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும் கூறப்பட்டது.

அஸ்ஸாமில் வெடித்த போராட்டம்
இச்சட்டத்துக்கு எதிராக அஸ்ஸாமில் முதலில் போராட்டம் வெடித்தது. வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள் பெரும் எண்ணிக்கையில் அஸ்ஸாமில் உள்ளனர். அப்படி சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை கொடுத்தால் மண்ணின் மைந்தர்கள், சிறுபான்மையினராகிவிடுவர் என்பதுதான் அச்சம். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. வடகிழக்கு மாநிலங்களில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். டெல்லியிலும் மிக தீவிரமாக சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

குவிந்த பொதுநலன் வழக்குகள்
இச்சட்டத்துக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட பொதுநலன் வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் பொதுநலன் வழக்குகளைத் தொடர்ந்தன. ஆனால் கொரோனா பெருந்தொற்று பரவியதால் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் கைவிடப்பட்டன. உச்சநீதிமன்றத்திலும் இவ்வழக்கு நிலுவையில் இருந்தது.

3 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றம்
அண்மையில் இந்த வழக்கை தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. பின்னர் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்குகள் மீது விசாரணை நடைபெற்றது.

டிசம்பர் 6-க்கு ஒத்திவைப்பு
இன்று தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் இவ்வழக்கை விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது அனைத்து தரப்பினரும் தங்களது வாதங்களை தாக்கல் செய்ய 3 வார கால அவகாசம் வழங்கப்பட்டது. அஸ்ஸாம், திரிபுரா மாநில அரசுகளும் பதில் மனுக்கள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
தாம்பரம் ட்விஸ்ட்.. ஸ்டாலின் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. எதிர்ப்பை ஆதரவாக்கிய திமுகவின் தேர்தல் வித்தை! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை நெருங்கி வந்த போலீசார்.. திடீரென ரெய்டு! ராமநாதபுரத்தில் சலசலப்பு -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன? -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications