ஆளுநரின் அதிகாரத்தை பறித்து தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்தது!
டெல்லி: தமிழ்நாடு ஆளுநரின் அதிகாரத்தைப் பறித்து தமக்கான சிறப்பு அதிகாரம் மூலமாக தமிழ்நாடு அரசின் நிறுத்திவைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் ரவி நிறுத்தி வைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்தது.

தமிழ்நாடு ஆளுநர் ரவியின் நடவடிக்கைகள் நேர்மையாக இல்லை; அரசியல் அமைப்புக்கு விரோதமாக இருக்கிறது; தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை நிறுத்தி வைத்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
அத்துடன், ஆளுநர் அனுப்பி வைத்த மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கையும் செல்லாது என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தமக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications