உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்சீவ் கண்ணா.. யார் இவர்?
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ள நிலையில், நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக இன்று சஞ்சீவ் கண்ணா பதவியேற்றுக்கொண்டார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்வில், சஞ்சீவ் கண்ணாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய் சந்திரசூட்டின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை டி ஒய் சந்திரசூட் பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, சஞ்சீவ் கண்ணாவிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காலை 10 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. உச்ச நீதிமன்றத்தின் 51வது நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்றுள்ளார். இவரது பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி வரை இருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள சஞ்சீவ் கண்ணா டெல்லியில் 1960 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை தேவ்ராஜ் கண்ணா டெல்லி உயர் நீதிமன்றத்தில் 1985 ஆம் ஆண்டு நீதிபதியாக இருந்தவர். இவரது தாயார் சரோஜ் கண்ணா, இந்தி பேராசிரியராக டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் பணி செய்தார். சஞ்சீவ் கண்ணா டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.

கடந்த 1983 ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். நீண்ட காலம் வழக்கறிஞராக பணியாற்றிய சஞ்சீவ் கண்னா, கடந்த 2004 ஆம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். 2005 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், தான் தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். வேறு எந்த ஒரு நீதிமன்றத்திலும் சஞ்சீவ் கண்ணா தலைமை நீதிபதி பொறுப்பை வகிக்கவில்லை. இதற்கு முன்பு ஒரு சில நீதிபதிகளே இப்படி வேறு எந்த நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்காமல் நேரடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications