சனாதனிகளை இனப்படுகொலை செய்ய தமிழக அரசே அழைப்பு என வாதம்- உச்சநீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு!
டெல்லி: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்ற பேச்சுக்காக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட மொத்தம் 4 வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செப்டம்பர் 2-ந் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு- மலேரியா- காலரா போல சனானத தர்மம் என்பதை ஒழிப்போம் என்றார். ஆனால் பாஜகவினரோ, சனாதனிகளை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பொய்யான வதந்திகளைக் கிளப்பிவிட்டனர். இதனை பிரதமர் மோடி உள்ளிட்டோரும் நம்பி தொடர்ந்து உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல சனாதன தர்மம் என்பது எய்ட்ஸ் நோய் போல; உலக சமூகத்துக்கே பெரும் அச்சுறுத்தலானது என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா. எம்.பி பேசினார். இதற்கும் வழக்கம் போல கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வினித் ஜிண்டல் தாக்கல் செய்த சனாதன எதிர்ப்பு பேச்சு தொடர்பான உதயநிதிக்கு எதிரான வழக்கு இன்று நீதிபதிகள் அனிருதா போஸ், பெலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.
நாடு முழுவதும் 40 வழக்குகள்: தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆனந்த் திவாரி ஆஜரானார். அப்போது, இந்தியா முழுவதும் இது போல 40 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஏற்கனவே இதே உச்சநீதிமன்றத்திலும் ஒரு வழக்கு தொடரப்பட்டு உதயநிதி ஸ்டாலினுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் வினித் ஜிண்டல் வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார் ஆனந்த் திவாரி.
இனப்படுகொலைக்கு தமிழ்நாடு அரசு அழைப்பாம்: மனுதாரர் வினித் ஜிண்டல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜ் கிஷோர் சத்ரி, தமிழ்நாடு அரசே இனப்படுகொலை செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதாக திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனை தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் மிக கடுமையாக ஆட்சேபனை தெரிவித்து எதிர்த்தார்.
4 வழக்குகளை ஒன்றாக விசாரிக்க முடிவு: இதனைத் தொடர்ந்து சனாதன எதிர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மொத்தம் 4 வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications