தேர்தல் பத்திரம்- சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரும் மனுக்களை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
டெல்லி: தேர்தல் பத்திர முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பொதுநலன் மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறும் என பட்டியலிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இந்தப் பொதுநலன் மனுக்களை நாளை விசாரிக்கிறது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறக் கூடிய திட்டம் கடந்த 5 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை ரூ.12,145.87 கோடி.இதில் தமிழ்நாட்டின் கோவை மார்ட்டினுக்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.1,365 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியிருந்தது. தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம் ரூ.966 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வழங்கியது.

தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடியாக இந்த நடைமுறையையே ரத்து செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தேர்தல் பத்திர முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தற்போதைய விதிகளின்கீழ் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமாக உள்ளது. தேர்தல் பத்திர முறை, தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. தேர்தல் பத்திர முறை திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றால் அதனை ரத்து செய்யலாம். இது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்தச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்தச் சட்டம், தேர்தல் பத்திர முறை தொடர்பான மற்ற சட்டத் திருத்த மசோதாக்களும், தேர்தல் பத்திரம் சட்டம் மட்டுமின்றி, கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் அரசு சாரா நிறுவனங்கள் பொதுநலன் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. அதில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பெரு நிறுவனங்கள் மற்றும் விசாரணை ஏஜென்சிகள் இடையேயான தொடர்புகள்; போலி நிறுவனங்கள் மூலமான தேர்தல் பத்திர நன்கொடை ஆகியவை குறித்து உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் நாளை விசாரிக்க உள்ளது.
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications