மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுப்பது குறித்து விதிமுறை வகுக்க நேரிடும்- உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
டெல்லி: மாநில சட்டசபைகளில் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு மாநிலங்களின் ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்காமல், முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது, கிடப்பில் போடுவது தொடர்ந்தால் ஆளுநர்கள் முடிவெடுப்பது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளா மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களை ஜனாதிபதிக்கு மாநில ஆளுநர் ஆரீப் முகமது கான் (ஆரிப் முகமது கான்) அனுப்பி வைத்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், மசோதாக்கள் மீது ஆளுநர்கள் காலதாமதம் இல்லாமல் முடிவெடுக்க வேண்டும். 2 ஆண்டுகளாக மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்தது ஏன்? பஞ்சாப் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மசோதாக்களுக்கு ஆளுநர் தாமதம் இல்லாமல் ஒப்புதல் தர வேண்டும். ஆளுநர் உரிய நேரத்தில் செயல்படாமல் போனால் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும் விவகாரத்தில் உச்சநீதிமன்றமே விதிமுறைகளை வகுக்க நேரிடும். மாநில முதல்வரை ஆளுநர் சந்திப்பது என்பது அரசியல் கணக்குகளை தீர்க்கவா? என கடுமையாக எச்சரித்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்றைய விசாரணையின் போது தெரிவித்த முக்கிய கருத்துகள்:
- மாநில சட்டசபைகளில் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது.
- மாநில சட்டசபை மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தரவில்லை என்கிற சர்ச்சைகளை இதற்கு முன்னர் கேள்விபட்டது இல்லை.
- கேரளா அரசு 3 அவசர சட்டங்களை இயற்றியது. இதற்கான 8 மசோதாக்களை நிறைவேற்றியது. இதில் 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் 23 மாதங்களாக நிலுவையில் வைத்துள்ளார். தற்போது 7 மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2 ஆண்டுகளாக மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் என்னதான் செய்து கொண்டிருந்தார்?
- மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கேரளா ஆளுநர் காலம் தாழ்த்துவதற்கான காரணம் எதுவுமே தெரியவில்லை.
- ஆளுநர்கள், மசோதாக்களுக்கு காலம் தாழ்த்தும் போக்கு தொடர்ந்தால் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுப்பது தொடர்பாக விதிகளை வகுக்க நேரிடும்.
- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் முதல்வரை ஆளுநர் சந்திக்க விரும்புவது அரசியல் கணக்குகளைத் தீர்த்து கொள்ளவா?
முன்னதாக, கேரளா ஆளுநர் ஆரீப் முகமது கான் வேண்டும் என்றே மாநில அரசின் மசோதாக்களை ஆளுநர் தாமதமப்படுத்துகிறார். மாநில அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநர்தான் அது தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இருக்கிறார். கேரளா அரசின் 7 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? மசோதாக்களை தாமதப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்படுகிறார் என கேரளா அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
-
நவீன ட்ரோன்களால் சிக்கிய சிறுமி உடல்! கர்நாடக ட்ரெக்கிங் போதை புகாரும், போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டும் -
மனைவி மீது 80 வழக்குகள்.. வக்கீல் கணவரின் மாஸ்டர் பிளான்.. சுப்ரீம் கோர்ட் மரண அடி! ரூ.5 கோடி எதற்கு -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம்












Click it and Unblock the Notifications