மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுப்பது குறித்து விதிமுறை வகுக்க நேரிடும்- உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
டெல்லி: மாநில சட்டசபைகளில் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு மாநிலங்களின் ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்காமல், முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது, கிடப்பில் போடுவது தொடர்ந்தால் ஆளுநர்கள் முடிவெடுப்பது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளா மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களை ஜனாதிபதிக்கு மாநில ஆளுநர் ஆரீப் முகமது கான் (ஆரிப் முகமது கான்) அனுப்பி வைத்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், மசோதாக்கள் மீது ஆளுநர்கள் காலதாமதம் இல்லாமல் முடிவெடுக்க வேண்டும். 2 ஆண்டுகளாக மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்தது ஏன்? பஞ்சாப் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மசோதாக்களுக்கு ஆளுநர் தாமதம் இல்லாமல் ஒப்புதல் தர வேண்டும். ஆளுநர் உரிய நேரத்தில் செயல்படாமல் போனால் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும் விவகாரத்தில் உச்சநீதிமன்றமே விதிமுறைகளை வகுக்க நேரிடும். மாநில முதல்வரை ஆளுநர் சந்திப்பது என்பது அரசியல் கணக்குகளை தீர்க்கவா? என கடுமையாக எச்சரித்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்றைய விசாரணையின் போது தெரிவித்த முக்கிய கருத்துகள்:
- மாநில சட்டசபைகளில் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது.
- மாநில சட்டசபை மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தரவில்லை என்கிற சர்ச்சைகளை இதற்கு முன்னர் கேள்விபட்டது இல்லை.
- கேரளா அரசு 3 அவசர சட்டங்களை இயற்றியது. இதற்கான 8 மசோதாக்களை நிறைவேற்றியது. இதில் 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் 23 மாதங்களாக நிலுவையில் வைத்துள்ளார். தற்போது 7 மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2 ஆண்டுகளாக மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் என்னதான் செய்து கொண்டிருந்தார்?
- மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கேரளா ஆளுநர் காலம் தாழ்த்துவதற்கான காரணம் எதுவுமே தெரியவில்லை.
- ஆளுநர்கள், மசோதாக்களுக்கு காலம் தாழ்த்தும் போக்கு தொடர்ந்தால் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுப்பது தொடர்பாக விதிகளை வகுக்க நேரிடும்.
- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் முதல்வரை ஆளுநர் சந்திக்க விரும்புவது அரசியல் கணக்குகளைத் தீர்த்து கொள்ளவா?
முன்னதாக, கேரளா ஆளுநர் ஆரீப் முகமது கான் வேண்டும் என்றே மாநில அரசின் மசோதாக்களை ஆளுநர் தாமதமப்படுத்துகிறார். மாநில அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநர்தான் அது தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இருக்கிறார். கேரளா அரசின் 7 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? மசோதாக்களை தாமதப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்படுகிறார் என கேரளா அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications