28 வயது பிரபல மாடல் தற்கொலை.. சிக்கும் இளம் ஐபிஎல் பிரபலம்? போலீஸ் வசம் சென்ற "அந்த" வாட்ஸ்அப் சாட்!
டெல்லி: 28 வயது பிரபல மாடல் தற்கொலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பிரபல இந்திய வீரர் பெயரும் அடிபடுகிறது. இதனால் போலீசார் விசாரணையை அவர் பக்கம் திருப்பியுள்ளனர்.
28 வயது பிரபல மாடல் தன்யா சிங் என்பவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையே வழக்கு விசாரணையில் யாருமே எதிர்பார்க்காத திருப்பங்கள் அரங்கேறி இருக்கிறது.
யார் அவர்: தன்யா சிங் தற்கொலை செய்து கொண்டு இரண்டு நாட்கள் ஆகும் நிலையில், இந்த மர்மமான மரணத்தில் தடயங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதற்கிடையே இந்த வழக்கில் ஐபிஎல் பிரபலம் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆல்ரவுண்டர் அபிஷேக் சர்மா. இந்த இருவருக்கும் இடையே தொடர்புகள் இருப்பதை முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
உயிரிழந்த மாடல் தன்யா வாட்ஸ்அப்பில் அபிஷேக் சர்மாவுக்கு மெசேஜ் செய்துள்ளார். இருப்பினும், அதற்கு அபிஷேக் தரப்பில் இருந்து எந்தவொரு ரிப்ளையும் வரவில்லை என்று இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார் கூறுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், "உயிரிழந்த மாடலுடன் அபிஷேக் சர்மா நட்பில் இருந்ததை விசாரணையில் கண்டறிந்துள்ளோம். அடுத்த கட்ட விசாரணையில் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று நினைக்கிறோம்" என்கிறார்கள்.
போலீஸ் திட்டம்: போலீசார் தரப்பில் இன்னும் அபிஷேக் ஷர்மாவை அதிகாரப்பூர்வமாகத் தொடர்பு கொள்ளவில்லை. இருப்பினும், இந்த வழக்கு தொடர்பாக மேலும் விளக்கம் பெற அவருக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர். அந்த ரிப்ளை இல்லாத மெசஜ்கள் தான் போலீசார் தங்கள் விசாரணையை அபிஷேக் சர்மா மீது திருப்பக் காரணமாக இருக்கிறது. மேலும், இருவருக்கும் இடையே எந்த மாதிரியான நட்பு என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.
அபிஷேக் ஷர்மா மாடல் அழகி தன்யாவின் மொபைல் எண்ணை பிளாக் செய்து வைத்துள்ளதாகப் பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களிலும் தன்யா அனுப்பும் மெசேஜ்களுக்கு அபிஷேக் சர்மா பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆல்-ரவுண்டரான அபிஷேக் சர்மா ஐபிஎல் தொடர்பில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறார்.
யார் அவர்: மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளரான தன்யா தனது பெற்றோருடன் வசித்து வந்தார், கடந்த திங்கள்கிழமை காலை அவரை எழுப்ப அவரது தந்தை பன்வர் சிங் சென்றபோது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 28 வயதான தன்யாவுக்கு பல்வேறு சமூக ஊடக வலைத்தளங்களில் கணிசமாக பலோயர்ஸ்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் உயிரிழந்த இடத்தை முழுமையாக செக் செய்த போலீசார் அங்கே கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து இப்போது போலீசார் தான்யா சிங்கின் தொலைப்பேசியில் இருக்கும் அழைப்பு விவரங்களை செக் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்,. அதில் கிடைக்கும் தகவல்களை வைத்து அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப் உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications