களமிறங்கிய "ஸ்லீப்பர் செல்கள்"? நாடு முழுவதும் 4 மாதங்களில் 24 ரயில்களை கவிழ்க்க "நாசவேலை"?
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களில் மட்டும் 24 ரயில்களை கவிழ்ப்பதற்கு திட்டமிட்ட நாசவேலைகள் நடத்தப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளது. ரயில்வே தண்டவாளங்களில் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி வைப்பது, சமையல் எரிவாயு சிலிண்டர்களை வைப்பது, தண்டவாள இணைப்புகளை அகற்றுவது உள்ளிட்ட நாசவேலைகளில் சமூக விரோதிகள் திட்டமிட்டே செயல்பட்டு வந்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் மைசூர் நகரில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தமிழ்நாட்டின் சென்னை அருகே கவரைப்பேட்டையில் சரக்கு ரயில் மீது பயங்கரமான விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் 19 பேர் படுகாயமடைந்தனர். 1700 பேர் பயணித்த நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டன. தேசியப் புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.வும் விசாரணை நடத்தியது. இதனால் கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த 4 மாதங்களில் மட்டும் 24 இடங்களில் ரயில்களை கவிழ்க்க நாசவேலைகள் நடந்திருப்பதாக ரயில்வே துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் இருந்து லக்சர் நோக்கி சென்ற சரக்கு ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.
இதேபோல உத்தரப்பிரதேசத்தின் பிலாஸ்புர் ரோடு- உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ராபூர் இடையே பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தின் குறுக்கே 7 அடி நீள இரும்பு கம்பி போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத் அருகே தண்டவாளத்தில் தண்டவாளத்தை காங்கிரீட் சிலாப்புகளுடன் இணைக்கும் இரும்பு தகடுகள் திட்டமிட்டே அகற்றப்பட்டிருந்தன. உத்தரப்பிரதேசம் கான்பூர் அருகே தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதஙளில் மட்டும் இப்படி மொத்தம் 24 நாசவேலைகள் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த நாசவேலைகள் யாருக்காக செய்யப்பட்டது? நாசவேலைகளில் ஈடுபட்டது ஸ்லீப்பர் செல்களா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications