"குடிபோதை.." நடுவானில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்.. விமானத்தில் எல்லை மீறிய பயணி! பகீர் சம்பவம்
டெல்லி: விமானத்தில் மதுபோதையில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. பாங்காக்கில் இருந்து மும்பை வந்த விமானத்தில் அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் நடந்துள்ளது.
நமது நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக விமானத்துறை இருக்கிறது. இந்தியாவில் விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
கொரோனா காலம் தவிர்த்து, ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

விமான துறை
இந்தியாவில் லோ காஸ்ட் கேரியர் எனப்படும் குறைந்த விலை விமானத்தில் பயணிப்பதையே இந்தியாவில் பலரும் விரும்புகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க இதுவே முக்கிய காரணம். அதேநேரம் சமீப காலங்களாக இந்திய விமான துறைக்கு போதாத காலம் போல.. தொடர்ச்சியாக விமானங்களில் நடக்கும் மோசமான சம்பவங்களே செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. நடுவானில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்தது முதல் பல மோசமான சம்பவங்கள் நடந்துள்ளது. இது பேசுபொருளாகியுள்ளது.

பாங்காக் மும்பை விமானம்
இதனிடையே மீண்டும் அதேபோல பகீர் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாங்காக்கில் இருந்து மும்பை வரும் இண்டிகோ 6E-1052 விமானத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். விமானம் வழக்கம் போல பாங்காக்கில் இருந்து கிளம்பியுள்ளது. சிறிது நேரத்தில் பயணிகளுக்கு அவர்கள் உணவுகளைப் பரிமாற ஆரம்பித்துள்ளனர். அப்போது ஒரு பயணி கடல் உணவு கேட்டுள்ளார்.

கை பிடித்து இழுத்து
இருப்பினும், அப்போது கடல் உணவு தீர்ந்துவிட்டதால், அவரிடம் அந்த பெண் பொறுமையாக இதை எடுத்துச் சொல்லியுள்ளார். அதற்குப் பதிலாக அவருக்கு சிக்கன் உணவை வழங்கியுள்ளனர். அதன் பின்னர் உணவுக்குப் பணம் செலுத்த அவரிடம் ஏடிஎம் கார்டு கேட்டபோது, அவர் அந்த பணிப்பெண்ணின் கைகளைப் பிடித்து இழுத்துள்ளார். கையை தட்டி விட்ட அந்த பெண் ஏடிஎம் கார்டு பின்னை கேட்டுள்ளார்.

குடிபோதை
அப்போது திடீரென எழுந்த அந்த பயணி, அனைவருக்கும் முன்னிலையிலேயே அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். அந்த பயணி குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பணிப்பெண் கூறுகையில், "நான் அவருக்கு சிக்கன் சர்வ் செய்தேன். அதன் பின்னர் பணம் செலுத்த அவரது ஏடிஎம் கார்டைக் கேட்டேன். கார்டை ஸ்வைப் செய்யும் சாக்கில், அவர் என் கையைப் பிடித்தார். நான் அதைத் தட்டி விட்டேன். ஏடிஎம் கார்டின் பின்னை போடச் சொன்னேன்.

அத்துமீறிய இளைஞர்
அப்போது அந்த பயணி எழுந்து மற்ற பயணிகளின் முன்னிலையில் என்னிடம் அத்துமீறினார். அவர் தவறாக நடந்துகொள்கிறார் என்று நான் கூச்சலிட்டபோது, அவர் மீண்டும் தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்துவிட்டார்" என்றார். இது தொடர்பாக இண்டிகோ நிர்வாகம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளது.. அதன்படி பாங்காக்- மும்பை விமானத்தில் பணிப் பெண்ணிடம் அத்துமீறிய அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அவர், 63 வயதான கிளாஸ் எரிக் ஹரால்ட் ஜோனஸ்ம் என்று அவர் தெரிவித்தார்.

கைது
மும்பையில் விமானம் தரையிறங்கியதும் கிளாஸ் எரிக்கை விமான ஊழியர்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். நடுவானில் பணிப்பெண்ணிடம் நடந்த இந்த அத்துமீறல் சம்பவத்தை இண்டிகோ நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவத்தில் தேவையான நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. அதேநேரம் இது குறித்து எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

தொடரும் சம்பவங்கள்
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே நடுவானில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மூன்று மாதங்களில் விமானத்தில் மோசமாக நடந்து கொண்டதாகக் கைது செய்யப்படும் 8ஆவது பயணி எரிக் ஆவர். முன்னதாக கடந்த மார்ச் 23ஆம் தேதி, துபாய்-மும்பை இண்டிகோ விமானத்தில் பயணித்த இருவர் மது போதையில் மிக மோசமாக நடந்து கொண்டனர். இதனால் அவர்களும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications