Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜன.6-ல் சட்டசபையில் மீண்டும் சம்பவமா? பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் சந்திப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீரென சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட பயணமாக டெல்லி செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியை ஆளுநர் ரவி சந்தித்து பேசியுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தம்மை பகிரங்கமாக 'திராவிட' எதிர்ப்பாளராக வெளிப்படுத்தி வருபவர். திராவிடத்துக்கு எதிராக சில ஆண்டுகளுக்கு முன்னர் தாம் அளித்த பேட்டியையே ராஜ்பவன் எனப்படும் ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அகற்றாமல் வைத்திருப்பவர்.

narendra modi tamilnadu rn ravi

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுடன் பல்வேறு விவகாரங்களில் மோதல்களில் ஈடுபட்டு வருகிறார் ஆளுநர் ரவி. மேலும் ஆளுநர் ரவிக்கு எதிராக திமுக அரசும் உச்சநீதிமன்றம் வரை சென்றும் இருந்தது.

தமிழ்நாடு சட்டசபை கூட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் போதும் ஆளுநரின் மோதல் போக்கு பகிரங்கமாக இருப்பதும் வழக்கம். கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ரவி உரையாற்ற தொடங்கிய போது, ஆளும் திமுக கூட்டணி கட்சிகளே அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. அப்போது ' தமிழ்நாடு' என்ற பெயரை பயன்படுத்த ஆளுநர் ரவி எதிர்ப்பு தெரிவித்திருந்தால் தமிழ்நாட்டின் ஆளும் கூட்டணி கட்சிகள் அவருக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தன.

மேலும் ஆளுநர் தமது உரையில், சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால், தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது; பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்து அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்கிற வரிகளையும் திராவிட மாடல் என்ற சொல்லையும் கவனமாக தவிர்த்திருந்தார். இது பெரும் சர்ச்சையானது.

அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாகச் செயல்பட்டு வரும் ஆளுநரின் செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருந்தாலும் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களின் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. பேரவையில் மிகவும் கண்ணியத்தோடு அரசமைப்பு சட்டத்தின் கீழ் உரையாற்ற வந்த ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்துகொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல, அரசின் கொள்கைகளுக்கேகூட அவர் மாறாக நடந்துகொண்டு தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்று என விமர்சித்தார்.

narendra modi tamilnadu rn ravi

இப்படி முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் ரவி, சட்டசபையில் இருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபை கூட்டத்தில் உரையாற்ற வருகை தந்த ஆளுநர் உரை, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்கிற சர்ச்சையை கிளப்பி 2 நிமிடத்திலேயே தமது உரையை முடித்துக் கொண்டதும் சர்ச்சையானது.

இதனிடையே அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி தமிழ்நாடு சட்டசபை ஆளுநர் உரையுடன் கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இந்த பின்னணியில் டெல்லிக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். தமிழ்நாடு சட்டசபை கூட இருக்கும் நிலையில் பிரதமர் மோடியை ஆளுநர் ரவி சந்தித்து பேசியிருப்பதன் பின்னணி குறித்துதான் தற்போது அரசியல் வட்டாரங்கள் விவாதித்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+