ஜன.6-ல் சட்டசபையில் மீண்டும் சம்பவமா? பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் சந்திப்பு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீரென சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட பயணமாக டெல்லி செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியை ஆளுநர் ரவி சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தம்மை பகிரங்கமாக 'திராவிட' எதிர்ப்பாளராக வெளிப்படுத்தி வருபவர். திராவிடத்துக்கு எதிராக சில ஆண்டுகளுக்கு முன்னர் தாம் அளித்த பேட்டியையே ராஜ்பவன் எனப்படும் ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அகற்றாமல் வைத்திருப்பவர்.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுடன் பல்வேறு விவகாரங்களில் மோதல்களில் ஈடுபட்டு வருகிறார் ஆளுநர் ரவி. மேலும் ஆளுநர் ரவிக்கு எதிராக திமுக அரசும் உச்சநீதிமன்றம் வரை சென்றும் இருந்தது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் போதும் ஆளுநரின் மோதல் போக்கு பகிரங்கமாக இருப்பதும் வழக்கம். கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ரவி உரையாற்ற தொடங்கிய போது, ஆளும் திமுக கூட்டணி கட்சிகளே அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. அப்போது ' தமிழ்நாடு' என்ற பெயரை பயன்படுத்த ஆளுநர் ரவி எதிர்ப்பு தெரிவித்திருந்தால் தமிழ்நாட்டின் ஆளும் கூட்டணி கட்சிகள் அவருக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தன.
மேலும் ஆளுநர் தமது உரையில், சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால், தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது; பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்து அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்கிற வரிகளையும் திராவிட மாடல் என்ற சொல்லையும் கவனமாக தவிர்த்திருந்தார். இது பெரும் சர்ச்சையானது.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாகச் செயல்பட்டு வரும் ஆளுநரின் செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருந்தாலும் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களின் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. பேரவையில் மிகவும் கண்ணியத்தோடு அரசமைப்பு சட்டத்தின் கீழ் உரையாற்ற வந்த ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்துகொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல, அரசின் கொள்கைகளுக்கேகூட அவர் மாறாக நடந்துகொண்டு தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்று என விமர்சித்தார்.

இப்படி முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் ரவி, சட்டசபையில் இருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபை கூட்டத்தில் உரையாற்ற வருகை தந்த ஆளுநர் உரை, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்கிற சர்ச்சையை கிளப்பி 2 நிமிடத்திலேயே தமது உரையை முடித்துக் கொண்டதும் சர்ச்சையானது.
மாண்புமிகு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள், மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து பயனுள்ள ஆலோசனை மேற்கொண்டார். மாநில மக்கள், தமிழ் மொழி, இலக்கியம் மீது அளவற்ற அன்பு செலுத்தும் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்… pic.twitter.com/I89fbNE0St
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 24, 2024
இதனிடையே அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி தமிழ்நாடு சட்டசபை ஆளுநர் உரையுடன் கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இந்த பின்னணியில் டெல்லிக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். தமிழ்நாடு சட்டசபை கூட இருக்கும் நிலையில் பிரதமர் மோடியை ஆளுநர் ரவி சந்தித்து பேசியிருப்பதன் பின்னணி குறித்துதான் தற்போது அரசியல் வட்டாரங்கள் விவாதித்து வருகின்றன.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications