பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்: நிதி ஆயோக் அறிக்கை
டெல்லி: பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்வதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
நாட்டின் மாநிலங்களின் கல்வி, உள் கட்டமைப்பு, பொருளாதாரம், சமூக முன்னேற்றம் உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு மாநிலங்களின் வளர்ச்சிகளை நிதி ஆயோக் தர வரிசைப்படுத்தி வருகிறது. தற்போது இது தொடர்பான ஒரு அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், கல்வி உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரத்துறைக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2 ஆம் இடத்தை பிடித்திருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் சுகாதார குறியீட்டில் தமிழகம் 3-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications