டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு 89-வது கூட்டம்- நவம்பர் மாத நீர் திறப்பு குறித்து ஆலோசனை!
டெல்லி: காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் காவிரியில் நவம்பர் மாதம் கர்நாடகா அரசு, தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீர் அளவு குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தொடர்பான வழக்கில் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவை அமைக்கப்பட்டன. காவிரி ஒழுங்காற்று குழுவானது கர்நாடகாவில் பெய்யும் மழை அளவு , கர்நாடகா அணைகளில் நீர் மட்டம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நீரை திறக்க வேண்டும் என பரிந்துரைக்கும். இந்த பரிந்துரையை பரிசீலிக்கும் காவிரி மேலாண்மை ஆணையம் இதனடிப்படையில் கர்நாடகாவுக்கு உத்தரவிடும். இதுதான் நடைமுறை.

காவிரி நீர் திறப்பு உத்தரவு: இதனடிப்படையில் கடந்த அக்டோபர் 13-ந் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடிநீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அக்டோபர் 15-ந் தேதி முதல் அக்டோபர் 30-ந் தேதி வரை இந்த நீரை திறக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடகாவோ வழக்கம் போல சொற்பமான நீரையே தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டுள்ளது.
மண்டியா போராட்டம்: மேலும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் 2 மாதங்களாக தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மண்டியா மாவட்டத்தில் தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிடும் அணைகளில் ஒன்றான கிருஷ்ணராஜ சாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து ஒரு சொட்டு நீரைக் கூட தமிழ்நாட்டுக்கு திறக்கவே கூடாது என்பதை வலியுறுத்தி மண்டியா விவசாயிகள் 2 மாதங்களாக பல்வேறு பொராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் தொடருவதால் அங்கு பதற்றமான நிலைமை நீடித்து வருகிறது.
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்: இந்த நிலையில்தான் இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. வீனித் குப்தா தலைமையில் இந்த ஒழுங்காற்று குழுக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்பட்ட நீரின் அளவு, நவம்பர் மாதம் திறக்க வேண்டிய நீரின் அளவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்படும். இதனடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த உத்தரவை பிறப்பிக்கும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications