தீவிர கண்காணிப்பில் கொரோனா ஹாட்ஸ்பாட் லிஸ்ட்.. 170 மாவட்டங்களில் தமிழகம்தான் முதலிடம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் 170 மாவட்ட கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களாக கண்டறியப்பட்ட நிலையில் அதிக மாவட்டங்களுடன் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் தொடங்கியது ரேபிட் பரிசோதனை

    தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் அதிகம் பாதித்த மாநிலங்களின் எண்ணிக்கையிலும் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்தில் தமிழகம் உள்ளது.

    இதனிடையே நாடு முழுவதும் லாக்டவுன் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும 170 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது. அந்த மாவட்டங்களில் ஹாட்ஸ்பாட் பகுதிகளை சிவப்பு மண்டலமாக அறிவித்தது.

    353 மாவட்டங்கள்

    353 மாவட்டங்கள்

    207 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிகக் குறைவாக இருக்கிறது. அது போல் 353 மாவட்டங்களில் பாதிப்பே இல்லை என அறிவித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழகத்தில் 22 ஹாட்ஸ்பாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    22 ஹாட்ஸ்பாட்

    22 ஹாட்ஸ்பாட்

    அவற்றில் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் அல்லது கொரோனா அதிகம் பரவும் சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    வெள்ளை மண்டலம்

    வெள்ளை மண்டலம்

    அதாவது 15 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டதால் அந்த மாவட்டம் ஹாட்ஸ்பாட்டாக கருதப்படுகிறது. தஞ்சாவூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், ஆகிய 9 மாவட்டங்கள் வெள்ளை மண்டலங்களாக கருதப்படுகிறது. ஏனைய மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    உத்தரப்பிரதேசம்

    உத்தரப்பிரதேசம்

    கொரோனா அதிகம் பரவும் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் அதிக மாவட்டங்களை பெற்று தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக 14 மாவட்டங்களுடன் மகாராஷ்டிரா அடுத்த இடத்தில் உள்ளது. இங்கு மும்பை, புனே, தானே, நாக்பூர், நாசிக் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அது போல் உத்தரப்பிரதேசத்தில் 13 மாவட்டங்களும், ராஜஸ்தானில் 12 மாவட்டங்களும், ஆந்திராவில் 11 மாவட்டங்களும், டெல்லியில் 10 மாவட்டங்களும் கொரோனா பாதித்த ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு ஏப்ரல் 20-ஆம் தேதி பிறகு சில அத்தியாவசிய பணிகளுக்காக கட்டுப்பாடுகள் ஏதும் தளர்த்தப்படாது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+