Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்குக" ஜனாதிபதியை நாளை சந்திக்கும் எம்பி-க்கள்.. திமுக முக்கிய மனு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நாளை சந்தித்து தமிழ்நாடு பிரதிநிதிகள் மனு அளிக்க உள்ளனர். சட்ட அமைச்சர் ரகுபதி, திமுக எம்பி-க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர். இளங்கோ, வில்சன் ஆகியோர் நாளை குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளனர்.

Tamilnadu MPs to Meet President Draupathi Murmu regarding Governor RN Ravi issue

நடப்பாண்டில் தமிழ்நாட்டின் சட்டசபை கூட்டம் ஜனவரி 9ம் தேதி தொடங்கியது. பொதுவாக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றிய போது, சமூக நீதி, திராவிட மாடல், தமிழ்நாடு, அம்பேத்கர், அண்ணா, பெரியார், கருணாநிதி உள்ளிட்ட ஏராளமான வார்த்தைகளை உச்சரிக்க மறுத்து கடந்து சென்றார்.

அதேபோல் சில வாசகங்களை அவராகவே சேர்த்து உரையாற்றினார். இதற்கு சட்டசபையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு, தீர்மானமும் கொண்டு வந்தார். இதனால் சட்டசபையில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார்.

ஆளுநரின் மரபு மீறிய செயலுக்கு விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஆளுநர் விவகாரத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஜன.9ம் தேதி மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஏற்கனவே ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக சார்பாக சட்ட ரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் திமுக சார்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க உள்ளனர். இதற்காக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்பி ஆ.ராசா ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். அதேபோல் தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி, வில்சன், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோரும் டெல்லியில் உள்ளனர். நாளை காலை 11.45 மணியளவில் குடியரசுத் தலைவரை திமுக நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.

இந்த சந்திப்பின் போது அரசியல் சாசனத்தை மீறி செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+