நான் ஆணையிட்டால்.. சாட்டையுடன் நாடாளுமன்றத்தைக் கலக்கிய எம்ஜிஆர்.. புரியாதவங்க இதை படிங்க!
டெல்லி:நாடாளுமன்றத்துக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இன்று வந்தார்.. என்னது? எம்ஜிஆர் நாடாளுமன்றத்துக்கு வந்தாரா என கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் அதே ஆச்சரியத்தை அளித்துள்ளார் தெலுங்கு தேசம் எம்ஜிஆர்... சாரி.. சாரி.. தெலுங்கு தேசம் எம்பி நரமல்லி சிவபிரசாத்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட போது, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் 29வது மாநிலமாக கடந்த 2014ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் அறிவிப்பு வெளியானது.
அதன் பின்னர் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்று சந்திரசேகர் ராவ் முதல் தடவையாகவும், தற்போது 2வது தடவையாகவும் முதல்வராக அரியணை ஏறியுள்ளார். அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த சந்திரபாபு தெலுங்கானா பிரிவை தொடர்ந்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க கோரி மத்திய அரசை வற்புறுத்தி வந்தார்.

சிறப்பு அந்தஸ்து கோரிக்கை
ஒரு கட்டத்தில் அந்த கோரிக்கையை முன் வைத்து பாஜகவுடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டார். இருப்பினும் சிறப்பு அந்தஸ்து என்ற கோரிக்கையை கைவிடாமல் தொடர்ந்து அவரும், அவரது கட்சியினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

போராடும் எம்பி சிவபிரசாத்
அந்த குரலுடன் வலம் வருபவர் தான் தெலுங்கு தேசம் எம்எல்ஏ நரமல்லி சிவ பிரசாத். அதற்காக அவர் நடத்தும் வித்தியாசங்கள் அத்தனை அற்புதம்.. ஏக நகைச்சுவை.. பலமுறை ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தை முன்வைத்து எம்.பி சிவபிரசாத் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடமணிந்து நாடாளுமன்றத்தில் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முழக்கமிட்ட எம்பிக்கள்
இந் நிலையில் நாடாளுமன்றத்தில் வழக்கமான அலுவல் பணிகள் துவங்கின. அப்போது அந்த வளாகத்தில் திரண்ட தெலுங்கு தேச எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். சிறப்பு அந்தஸ்து கோரி அவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தான் போராட்டத்தின் ஹைலைட். அவர் தான் ஆந்திர எம்பி சிவபிரசாத்.

எம்பியாக வந்த எம்ஜிஆர்
வழக்கம்போல் வெள்ளை நிற வேட்டி,சட்டை, எம்ஜிஆர் அணிவது போன்ற தொப்பி, சட்டையின் மேலே வாட்ச் அணிந்திருப்பது என வந்தவர் இன்றே சற்றே வித்தியாசமாக காட்சியளித்தார். கையில் நான் ஆணையிட்டால் என்ற எம்ஜிஆர் பாடலில் காணப்படுவதை போன்ற சாட்டையுடன் களமிறங்கினார். சவுக்குடன் "நான் ஆணையிட்டால்" பாடலை இசைத்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பல வேஷங்கள் போட்டவர்
இதற்கு முன்னர் அவரது மகாத்மா காந்தி, கிறிஸ்துமஸ் தாத்தா போன்றும் வேடமணிந்து வந்துள்ளார். அவரது இந்த நடவடிக்கை பார்ப்பவர்களுக்கு வேறுவிதமாக தெரிந்தாலும் சொந்த மாநில நலனுக்காக போராடுகிறார் என்று பாராட்டவும் செய்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications