மோடி-எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பில் தம்பிதுரை இல்லையே கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது, லோக்சபா துணை தலைவர் தம்பிதுரை உடனில்லை என்பது பரபரப்பு விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கஜா புயல் நிவாரண நிதி உதவி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உடன் இல்லை. இவர் அதிமுகவின் டெல்லி முகமாக இருப்பவர். சீனியர் தலைவரும் கூட.

இப்போது சந்திப்பதில்லை

இப்போது சந்திப்பதில்லை

தம்பிதுரை கடந்த சில மாதங்கள் முன்புவரை, முதல்வர்-பிரதமர் சந்திப்பு காலகட்டங்களில் உடன் இருந்து வந்தவர். ஆனால், சமீபகாலமாக மோடியுடனான, எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்புகளில், தம்பிதுரை இருப்பது கிடையாது. இன்று பிரதமரை தம்பிதுரை சந்தித்தபோதும், எடப்பாடி பழனிச்சாமி உடன் இல்லை.

கடும் விமர்சனங்கள்

கடும் விமர்சனங்கள்

இவ்வாறு தம்பிதுரை, பிரதமருடனான சந்திப்பை தவிர்க்க காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக, மத்திய அரசையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் தம்பிதுரை. இதன் காரணமாகத்தான், பிரதமருடான சந்தி்ப்பில் தம்பிதுரை இல்லை என்று கூறப்படுகிறது.

ஹிந்தி திணிப்பு, நிதி உதவி

ஹிந்தி திணிப்பு, நிதி உதவி

மத்திய அரசு ஹிந்தியை புகுத்துகிறது, தமிழக அரசுக்கு நிதி கொடுப்பதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளை தம்பிதுரை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வருகிறார்.

மத்திய அமைச்சர் பதில்

மத்திய அமைச்சர் பதில்

இதுகுறித்து தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேட்டபோது, தம்பிதுரைதான் இதற்கு பதிலளிக்க வேண்டும். ஏதாவது அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+